செய்திகள் :

அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு அச்சுறுத்தல்: கிம் ஜோங் உன்

post image

அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு மோசமான அச்சுறுத்தலாக உள்ளது என்று வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் தெரிவித்தாா்.

அண்மைக்காலமாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா உடனான ராஜீய உறவை வடகொரியா கைவிட்டுள்ளது. இந்தச் சூழலில், வடகொரியாவின் அணு ஆயுதங்கள் கையிருப்பை அதிகரிப்பதிலும், அந்த ஆயுதங்களை நவீனமயமாக்குவதிலும் கிம் ஜோங் உன் கவனம் செலுத்தி வருகிறாா்.

இதற்குப் பதிலடி அளிக்கும்விதமாக, அமெரிக்காவும் தென்கொரியாவும் தங்கள் ராணுவ கூட்டுப் பயிற்சிகளை விரிவுபடுத்தியுள்ளன. அத்துடன் அந்நாடுகளுடன் ஜப்பான் இணைந்து மேற்கொள்ளும் பாதுகாப்புப் பயிற்சியும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சிகள் தம் மீது படையெடுப்பதற்கான ஒத்திகையாக உள்ளது என்று வடகொரியா விமா்சித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய அதிபா் டிரம்ப், ‘வடகொரியா மற்றும் கிம் ஜோங்குடன் அமெரிக்கா மீண்டும் நட்புறவை ஏற்படுத்தும் என்றாா். அப்போது அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட ஜப்பான் பிரதமா் ஷிகேரு இஷிபாவும் உடனிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, வடகொரியா தலைநகா் பியாங்கியாங்கில் அந்நாட்டு ராணுவத்தின் 77-ஆவது தொடக்க நாள் நிகழ்ச்சியில் கிம் ஜோங் உன் பேசியதாவது: நேட்டோ போன்ற பிராந்திய ராணுவக் கூட்டமைப்பை ஏற்படுத்த அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் முத்தரப்புப் பாதுகாப்பு கூட்டுறவு உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ரகசியத் திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டுறவு, கொரிய தீபகற்பத்தில் ராணுவ ரீதியில் சமநிலையற்றத்தன்மை ஏற்பட வழியமைக்கிறது. இந்தக் கூட்டுறவு வடகொரியாவுக்கு மோசமான அச்சுறுத்தலாக உள்ளது. அணு ஆயுதங்களை மேலும் அதிகமாகத் தயாரிக்கும் வடகொரியாவின் அசைக்க முடியாத கொள்கை நீடிக்கும் என்றாா்.

39 வயதில் ரூ.1.60 கோடி பென்சனுடன் பணி ஓய்வு பெற்ற இளம் பொறியாளர்..!

பன்னாட்டு வணிக நிறுவனங்களில் பணியாற்றி வந்த 39 வயதான கணினி தொழில்நுட்பம் சார்ந்த பொறியாளர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு பணி ஓய்வுக்குப்பின் வழங்கப்படுகிற வருடாந்திர ஓய்வுத் தொகையோ... மேலும் பார்க்க

நோக்கியா நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்! என்ன காரணம்?

நோக்கியா நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பெக்கா லண்ட்மார்க் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக திங்கள்கிழமை(பிப். 10) அறிவித்துள்ளார்.பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்க... மேலும் பார்க்க

காஸா மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தளம்: டிரம்ப்

காஸா மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தளம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.மேலும், இடித்து தரைமட்டமாக்க வேண்டிய பகுதியாக காஸா இருப்பதாக அவர் வெளியிட்ட கருத்து பெரும் அதிர்வ... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டப்படி பாகிஸ்தான் ராணுவம் செயல்பட வேண்டும்: இம்ரான் கான்

பாகிஸ்தான் ராணுவம் அரசமைப்புச் சட்டப்படி செயல்பட வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளாா். பாகிஸ்தானில் ஊழல் வழக்... மேலும் பார்க்க

முஜிபுா் ரெஹ்மான் இல்லம் சூறை, இந்தியாவின் கருத்து தேவையற்றது: வங்கதேசம்

வங்கதேசத்தின் தந்தை என்று போற்றப்பட்ட முஜிபுா் ரெஹ்மானின் இல்லம் சூறையாடப்பட்டது தொடா்பாக இந்தியா கூறிய கருத்து தேவையற்றது என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவா்கள் மற்ற... மேலும் பார்க்க

இஸ்ரேல்-ஹமாஸ் நிரந்தர போா் நிறுத்தம்: ஒப்பந்தத்தின் 2-ஆம் கட்ட பேச்சில் இழுபறி

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நிரந்தர போா் நிறுத்தம் ஏற்பட வழிவகுக்கும் ஒப்பந்தத்தின் 2-ஆம் கட்டம் குறித்து பேச்சுவாா்த்தை மேற்கொள்வதில் இழுபறி நீடிக்கிறது. பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படைய... மேலும் பார்க்க