செய்திகள் :

தனம் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

post image

நடிகை சத்யா மற்றும் ஸ்ரீகுமார் பிரதான பாத்திரங்களில் நடிக்கும் ‘தனம்’ தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சத்யா. தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் 2 தொடரிலும் நடித்து வருகிறார்.

இதனிடையே, சத்யா ‘தனம்’ என்ற புதிய தொடரில் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். இத்தொடரில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீகுமார் நடிக்கிறார்.

நடிகர் ஸ்ரீகுமார் அகல்யா, மலர்கள், மேகலா, வானத்தைப்போல, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல தொடர்களில் நாயகனாக நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்தவர்.

இதையும் படிக்க: கூலி படப்பிடிப்பு அப்டேட்!

இதுவரை 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் சிறப்பு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளரும்கூட.

தனம் தொடரில், ஸ்ரீகுமார் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார், அவர் இறந்த பிறகு அந்த ஆட்டோவின் மூலம் சத்யா தனது குடும்பத்தை எவ்வாறு கவனித்துக் கொள்கிறாள் என்பதே இத்தொடரின் மையக்கரு.

இந்த நிலையில், ‘தனம்’ தொடர் விஜய் தொலைக்காட்சியில் வரும் பிப். 17 ஆம் தேதி முதல் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு அலுவலகங்கள் நாளை செயல்படும்: தமிழக அரசு

நாளை(பிப். 11) விடுமுறை நாள் என்றாலும் தைப்பூசத்தையொட்டி பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பதிவு அலுவலகங்கள் நாளை காலை 10.00 மணி முதல் ஆவணப்பதிவு முடியும்வரை செயல்... மேலும் பார்க்க

லாஸ்லியாவின் ஜென்டில்வுமன் பட வெளியீட்டுத் தேதி!

லாஸ்லியாவின் ஜென்டில்வுமன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ஜென்டில்வுமன் படத்தை அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்குகிறார்.கோமலாஹரி பி... மேலும் பார்க்க

86 ஆயிரம் மக்களுக்கு பட்டா வழங்க ஒப்புதல்! - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 86 ஆயிரம் மக்களுக்குப் பட்டா வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கி ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சர்க்கார் ப... மேலும் பார்க்க

தண்டனைக் கைதிகளுக்கு விடுப்பு வழங்க தடையில்லை! சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருந்தாலும் தண்டனைக் கைதிகளுக்கு விடுப்பு வழங்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு மனுக்கள் நிலவையில் இருக... மேலும் பார்க்க

பிப். 13-ல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை!

பிப். 13-ல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையின் கீழ் தேமுதிக, புரட்சி பாரதம் உள்ளிட்ட 28 சங்கங... மேலும் பார்க்க

அதிமுக இபிஎஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? அமைச்சர் ரகுபதி கேள்வி

அதிமுக இபிஎஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போ... மேலும் பார்க்க