செய்திகள் :

ஊட்டி: கடமானை வேட்டையாடி, உப்புக் கண்டம் போட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..! என்ன நடந்தது?

post image

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உள்பட்ட பகுதியில் கடமானை வேட்டையாடி அதன் இறைச்சியை பதப்படுத்த உப்புக் கண்டம் போட்டு வருவதாக வனத்துறையினருக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் வனத்துறையினர் சோதனை மேற்கொண்டு வந்துள்ளனர். கூக்கல்தொரை அருகில் உள்ள பாறையில் கடமான் இறைச்சியை காய‌ வைத்து பதப்படுத்திக் கொண்டிருந்த சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் குமார், குமார் இருண்டு பழங்குடி இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

கடமான் வேட்டை

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் பிரகாஷ் என்ற இளைஞருக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்து அவரையும் கைது செய்துள்ளனர். மூன்று பேர் மீதும் வனவிலங்கு வேட்டை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையிலும் மூங்கில் கம்புகள் மற்றும் ரப்பர் பைப் மூலம் வனத்துறையினர் கண்மூடித்தனமாக தங்களை தாக்கியதாக நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். இதைக் கேட்ட நீதிமன்றம், அவர்களை சிறைக்கு அனுப்பும் முடிவை மாற்றி ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், "சத்தியமங்கலம் பகுதியில் இருந்து கூலி வேலைக்காக வந்து நீலகிரியில் தங்கியிருந்த மூன்று பேரும் சுருக்கு வலை மூலம் கடமானை வேட்டையாடியுள்ளனர். அவர்களிடம் இருந்த இறைச்சி மற்றும் வேட்டையாட பயன்படுத்திய‌ பொருள்களை பறிமுதல் செய்தோம். முறையாக விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது " என முடித்துக் கொண்டனர்.

கடமான் வேட்டை

கைதானவர்கள் தரப்பினர் கூறுகையில், "மூன்று பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னரே வனத்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார்கள். இது குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும்" என வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னை: பாஜக பிரமுகர் மீது இளம்பெண் பாலியல் புகார்; விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவர், சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.அதில், ``நான் தற்போது ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறேன். ... மேலும் பார்க்க

`வலித் தெரியாமல் அவன் வாழ்நாள் முடிந்துவிடக் கூடாது!’ - ரயில் கொடூரன் மீது கொதிக்கும் பெண்ணின் கணவர்

இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் நொடியிலும் ஏதோவொரு ஒரு மூலையில் பாலியல் அத்துமீறலில் யாரேனும் ஒரு சகோதாரி பாதிக்கப்பட்டுகொண்டிருக்கலாம் என்கிற அச்ச சூழல் உருவாகியிருக்கிறது.6-2-2025 அ... மேலும் பார்க்க

திருவாரூர்: 20 நாட்களில் 2 போலீஸார் தற்கொலை முயற்சி... நீடாமங்கலம் காவல் நிலையத்தில் என்ன நடக்கிறது?

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார்.போலீஸானஇவர் கடந்த ஏழு ஆண்டுகளாகத் திருவாரூர் மாவட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வருகிறார். தற்போது, நீடாமங்கலம் காவல் நிலையத்தில் எழுத்தராகப் பணிபுரிகிறார். இந... மேலும் பார்க்க

திருப்பதி லட்டு விவகாரம்: போலி ஆவணம், போலி நெய்... 4 பேர் கைது.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

ஆந்திர மாநிலத்தில், கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது நியமிக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு லட்டு தயாரிப்புக்காக கொள்முதல் செய்த நெய்யில் கலப்படம் இருப்பதாக புகார் எழுந்தது. அறங்காவலர... மேலும் பார்க்க

விருதுநகர்: 40 பவுன் திருட்டு நகை, துப்பாக்கி... வசமாகச் சிக்கிய காவலர்; மர்மநபருக்கு வலைவீச்சு

விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி அருகே நகை, கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம்.அப்போது நம்மிடம் ... மேலும் பார்க்க

என்கவுன்ட்டர்: சத்தீஸ்கரில் 31 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை! - தொடரும் தேடுதல் வேட்டை!

சத்தீஸ்கர் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் 8 மாவட்டங்கள் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கத்தில் இருப்பதாக அரசு கூறுகிறது. அதனால், தந்தேவாடா, பஸ்தர், பிஜாப்பூர், நாராயண்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த ஆண்டு மா... மேலும் பார்க்க