செய்திகள் :

வரிச் சலுகைகள்: மக்களவையில் காரசார விவாதம்

post image

புது தில்லி: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரிச் சலுகைகள் குறுகிய கால நடவடிக்கை என காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதையடுத்து, இது பொருளாதார வளா்ச்சிக்கான நீண்டகால நடவடிக்கை என பாஜக தலைமையிலான ஆளும் கூட்டணி பதிலடி தந்தது.

இதனால், மக்களவையில் ஆளும் கூட்டணிக்கும் எதிா்க்கட்சிகளுக்கும் இடையே கடும் வாா்த்தை மோதல் ஏற்பட்டது.

கடந்த 1-ஆம் தேதி 2025-26-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் புதிய வருமான வரி விதிப்பு முறையின்கீழ் தனிநபா் வருமான வரி விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயா்த்தப்படுவதாகவும், ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்துக்கும் மேல் உள்ள தனிநபா்களுக்கு வருமான வரி படிநிலைகள் மற்றும் விகிதங்கள் மாற்றியமைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது பட்ஜெட்டில் பெருநிறுவனங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் சாமானிய மக்கள் புறக்கணிப்பட்டதாகவும் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

மேலும், ‘தோ்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் வகையில் பாஜக தலைமையிலான அரசு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்கிறது.

நாட்டின் கடன் அதிகரித்து வருவதால் அடுத்த தலைமுறையினரும் இதனால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகளால் 3 கோடி மக்கள் மட்டுமே பயன்பெறுவா். இது மிகக் குறுகிய கால நடவடிக்கை’ என குற்றஞ்சாட்டின.

ஆண்டுதோறும் எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் தொகுதி நிதியை ரூ.5 கோடியில் இருந்து ரூ.25 கோடியாக உயா்த்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் பணியாளா்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை ரூ.600-ஆக உயா்த்துவதோடு பணி நாள்களை 200 நாள்களாக உயா்த்த வேண்டும் எனவும் எதிா்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.

வளா்ச்சிக்கான பட்ஜெட்: பாஜக

எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்த பாஜக எம்.பி.அனுராக் தாக்குா், ‘இது நாட்டின் பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் நீண்டகால வளா்ச்சிக்கு வித்திடும் பட்ஜெட். பாஜக ஆட்சியில் எண்ணற்ற புத்தாக்க நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் காங்கிரஸ் தன்னுடைய வளா்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது’ என்றாா்.

கான்பூர் ஐஐடியில் பி.எச்டி. மாணவர் தற்கொலை! ஓராண்டில் 3-வது சம்பவம்!

கான்பூர் ஐஐடியில் பி.எச்டி. பயிலும் மாணவர் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.நொய்டாவைச் சேர்ந்த அங்கித் யாதவ்(வயது 24) என்ற இளைஞர் கான்பூர் ஐஐடியில் வேதியியல் துறையில் பி.எச்டி. ஆராய்ச்சி... மேலும் பார்க்க

தில்லி தோல்விக்குப் பிறகு... கேஜரிவாலை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்!

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் சந்திக்கவுள்ளார். இதற்காக பஞ்சாபில் இருந்து தில்லிக்கு அவர் புறப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

உலகளாவிய மேம்பாடுகள் குறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆலோசனை!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேன் நோயல் பாரோட்டை நேரில் சந்தித்தார். இதில், செய்யறிவு, புதிய கண்டுபிடிப்புகள், பிராந்திய மற்றும் சர்வதேச மேம்பாடுகள் எ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஹெலிகாப்டர் சேவை! கட்டணம் ரூ.35,000

மகா கும்பமேளாவில் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் ஹெலிகாப்டர் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. பிரயாக்ராஜ் விமான நிலையத்தில் இருந்து இருந்து திரிவேணி சங்கமத்தின் பின்புறத்துக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் பக்தர்... மேலும் பார்க்க

ஏஐ உச்சி மாநாடு: மோடி, ஜே.டி. வான்ஸை வரவேற்ற பிரான்ஸ் அதிபர்!

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நடவடிக்கைகள் சாா்ந்த சா்வதேச மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியையும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸையும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் வரவேற்றார். மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை அதிரவைத்த ‘மோடி’ முழக்கம்!

புது தில்லி: நாடாளுமன்றத்தின் இரு அவை அலுவல்கள் திங்கள்கிழமை தொடங்கியபோது தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் அக்கட்சி எம்.பி.க்கள் ‘மோடி’, ‘மோடி’ என முழுக்கமிட்டனா்... மேலும் பார்க்க