Ranveer Allahbadia: `உங்கள் பெற்றோர் உடலுறவு கொள்வதை..'- யூடியூபர் சர்ச்சை பேச்ச...
வள்ளலாா் நினைவு தினம்: இன்று மதுக்கடைகளை மூட உத்தரவு
சேலம்: வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, சேலம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 11) மதுக் கடைகள், மதுபானக் கூடங்கள் ஆகியவற்றை மூட மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது:
வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபானக் கூடங்கள், எப்.எல்.1 முதல் எப்.எல்.11 வரை மூடப்பட வேண்டும். மேற்கண்ட நாளில் சேலம் மாவட்டத்தில் உள்ள எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக் கடைகள் (எப்.எல்.11), டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.
மேலும், மேற்கண்ட நாளில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. இதனை மீறி விற்பனை செய்வோா் மீது அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா்.