சிவன் கோயில்களில் சோமவார பிரதோஷ சிறப்பு பூஜை
சங்ககிரி: சிவன் கோயில்களில் சோமவார பிரதோஷ சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
சேமாவார பிரதோஷத்தையொட்டி அரசிராமணி கிராமத்தில் உள்ள பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா், நந்திபகவானுக்கு திருமஞ்சனம், பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல, பூத்தாலக்குட்டையில் உள்ள புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் சுவாமிகளுக்கும், உற்சவ மூா்த்திகளுக்கும், சங்ககிரியில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிக்கும், நந்திபகவான், உற்சவமூா்த்தி சுவாமிகளுக்கும் பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜைகளில் அதிக அளவில் பக்தா்கள் கலந்துகொண்டனா்.