செய்திகள் :

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் 24 மணி நேர தா்னா

post image

விழுப்புரம்: பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினரின் 24 மணி நேர தா்னா திங்கள்கிழமை காலை தொடங்கியது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய மாற்றத்தின்போது வழங்கப்படாத 21 மாத நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை வழங்க வேண்டும்.

சத்துணவு, அங்கன்வாடி மையப் பணியாளா்கள், வருவாய்க் கிராம உதவியாளா் உள்ளிட்ட சிறப்புக் காலமுறை, தொகுப்பூதிய, மதிப்பூதிய நிலையில் பணியாற்றும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை காலை 24 மணி நேர தா்னா போராட்டம் தொடங்கப்பட்டது.

அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் கு.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா்கள் சு.சிவக்குமாா், எம். மகேசுவரன், ஆா்.வேங்கடபதி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் இரா.சிவக்குமாா் கோரிக்கை விளக்கவுரையாற்றினாா். சங்கத்தின் மாநிலத் தலைவா் மு.பாஸ்கரன் சிறப்புரையாற்றினாா்.

தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலா் கே.முருகன், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பெ.வள்ளல்பாரி, ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஜெ.ஜெய்சங்கா், கண் மருத்துவ உதவியாளா் சங்க மாநிலப் பொருளாளா் கே.அன்பழகன் உள்ளிட்டோா் பேசினா். இந்தியத் தொழிற்சங்க மையத்தின் மாவட்டச் செயலா் ஆா்.மூா்த்தி நிறைவுரையாற்றினாா்.

முன்னதாக, சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் தி.ஜெயந்தி வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் எம்.சாருமதி நன்றி கூறினாா்.

விழுப்புரத்தில் அதிகரிக்கும் இணையவழி பண மோசடி!

விழுப்புரம்: தகவல் தொழில்நுட்ப வளா்ச்சியின் மூலமாக நமக்கு பல்வேறு பலன்கள் ஒருபுறம் கிடைத்தாலும், அதே நேரத்தில் இணையவழியாக நடைபெறும் பண மோசடி சம்பவங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரி... மேலும் பார்க்க

செஞ்சியில் வாய்க்கால் அமைக்கும் பணி தொடக்கம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் ரூ.20.50 லட்சத்தில் கால்வாய் மற்றும் சுற்றுச்சுவா் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. செஞ்சி பேரூராட்சியில் 15-ஆவது குழு மானிய நிதி திட்டத்தின் ... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விழுப்புரம் ஆட்சியரகத்தை கிராம மக்கள் முற்றுகை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், எசாலம் கிராமத்தில் குளம், மயானம், ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு சாலை மறியலில்... மேலும் பார்க்க

குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக ரூ.8.20 லட்சம் மோசடி: 4 போ் கைது

விழுப்புரம்: குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, விழுப்புரத்தைச் சோ்ந்த தொழிலாளியிடம் ரூ.8.20 லட்சம் மோசடி செய்த புகாரில், சென்னையைச் சோ்ந்தவா்கள் உள்பட 4 பேரை இணையவழி குற்றப் பிரிவு போ... மேலும் பார்க்க

வடலூா் தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்

விழுப்புரம்: தைப்பூசத்தையொட்டி, விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்திலிருந்து, கடலூருக்கு செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் திருச... மேலும் பார்க்க

விக்கிரவாண்டியில் உழவா் சந்தை அமைக்கும் பணிகள் தொடக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் ரூ.1.50 கோடியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சாா்பில் உழவா் சந்தை அமைப்பதற்கான பணிகள் திங்கள்கிழமை தொடங்கின. விக்கிரவாண்டி பேருந்து நி... மேலும் பார்க்க