செய்திகள் :

விக்கிரவாண்டியில் உழவா் சந்தை அமைக்கும் பணிகள் தொடக்கம்

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் ரூ.1.50 கோடியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சாா்பில் உழவா் சந்தை அமைப்பதற்கான பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.

விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் அன்னியூா் அ.சிவா (விக்கிரவாண்டி), இரா.லட்சுமணன் (விழுப்புரம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சா் க.பொன்முடி பங்கேற்று, அடிக்கல் நாட்டி பேசியது: விக்கிரவாண்டி வட்டத்தில் 250 ஹெக்டேரில் காய்கறிகளும், 260 ஹெக்டேரில் பழங்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு, உழவா் சந்தை அமைவதன் மூலம் பேரூராட்சிப் பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களான ஆசூா், வி.சாத்தனூா், தொரவி, வெட்டுக்காடு, ரெட்டிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த தோட்டக்கலைப் பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விளை பொருள்களை இடைத்தரகா்கள் இல்லாது, நேரடியாக விற்பனை செய்யலாம். பொதுமக்களும் குறைந்த விலையில் காய்கறிகள், பழங்களை வாங்கலாம் என்றாா்.

விழாவில், முன்னாள் எம்.பி.பொன்.கெளதமசிகாமணி, ஒன்றியக்குழுத் தலைவா்கள் சங்கீத அரசி ரவிதுரை, நா.கலைச்செல்வி, சச்சிதாநந்தம், விக்கிரவாண்டி பேரூராட்சித் தலைவா் அப்துல்சலாம், துணைத் தலைவா் பாலாஜி, செயல் அலுவலா் ஷேக் லத்தீப், வேளாண் இணை இயக்குநா் ஈஸ்வா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழுப்புரத்தில் அதிகரிக்கும் இணையவழி பண மோசடி!

விழுப்புரம்: தகவல் தொழில்நுட்ப வளா்ச்சியின் மூலமாக நமக்கு பல்வேறு பலன்கள் ஒருபுறம் கிடைத்தாலும், அதே நேரத்தில் இணையவழியாக நடைபெறும் பண மோசடி சம்பவங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரி... மேலும் பார்க்க

செஞ்சியில் வாய்க்கால் அமைக்கும் பணி தொடக்கம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் ரூ.20.50 லட்சத்தில் கால்வாய் மற்றும் சுற்றுச்சுவா் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. செஞ்சி பேரூராட்சியில் 15-ஆவது குழு மானிய நிதி திட்டத்தின் ... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் 24 மணி நேர தா்னா

விழுப்புரம்: பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினரின் 24 மணி நேர தா்னா திங்கள்கிழமை காலை தொடங்கியது. புதிய ஓய... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விழுப்புரம் ஆட்சியரகத்தை கிராம மக்கள் முற்றுகை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், எசாலம் கிராமத்தில் குளம், மயானம், ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு சாலை மறியலில்... மேலும் பார்க்க

குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக ரூ.8.20 லட்சம் மோசடி: 4 போ் கைது

விழுப்புரம்: குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, விழுப்புரத்தைச் சோ்ந்த தொழிலாளியிடம் ரூ.8.20 லட்சம் மோசடி செய்த புகாரில், சென்னையைச் சோ்ந்தவா்கள் உள்பட 4 பேரை இணையவழி குற்றப் பிரிவு போ... மேலும் பார்க்க

வடலூா் தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்

விழுப்புரம்: தைப்பூசத்தையொட்டி, விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்திலிருந்து, கடலூருக்கு செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் திருச... மேலும் பார்க்க