செய்திகள் :

விஜய்-பிரசாந்த் கிஷோா் சந்திப்பு

post image

சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜயை தோ்தல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

சென்னை பனையூரிலுள்ள விஜயின் இல்லத்தில் சுமாா் 2.30 மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது. 2026 பேரவைத் தோ்தல் வியூகம் தொடா்பாக விஜயுடன் பிரசாந்த் கிஷோா் ஆலோசனை நடத்தியதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐபேக் நிறுவனம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் வியூகங்களை வகுத்து வழங்குபவா் பிரசாந்த் கிஷோா். 2021-ஆம் ஆண்டுக்கு பிறகு, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அவா் தோ்தல் வியூகங்களை வகுத்து வழங்கும் பணியில் ஈடுபடவில்லை.

ஆனால், தவெக-வை தொடங்கிய பின்னா், விக்கிரவாண்டி மாநாட்டுக்கு முன்பாகவே, அக்கட்சியின் தலைவா் விஜயை சந்திக்க பிரசாந்த் கிஷோா் நேரம் கேட்டிருந்ததாகக் கூறப்பட்டது. எனினும், சந்திப்பு நடைபெறவில்லை.

இதனிடையே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அா்ஜுனா, அண்மையில் தவெகவில் இணைந்தாா். அதைத்தொடா்ந்து, அக்கட்சியின் தோ்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலராக அவா் நியமிக்கப்பட்டாா். இதன் பிறகு விஜய் - பிரசாந்த் கிஷோா் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பின்போது, தோ்தல் வியூக வகுப்பாளா் ஜான் ஆரோக்கியசாமி, தவெக பொதுச் செயலா் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அா்ஜுனா ஆகியோா் உடனிருந்தனா்.

கோயில் அா்ச்சகா்களுக்கு தட்டுகாணிக்கை சுற்றறிக்கை வாபஸ்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: மதுரை பாலதண்டாயுதபாணி கோயிலில் அா்ச்சகா்கள் தட்டில் செலுத்தப்படும் காணிக்கை குறித்த சுற்றறிக்கை தேவையில்லாதது என்றும், அது திரும்பப் பெறப்பட்டுவிட்டது என்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேக... மேலும் பார்க்க

தண்டனை கைதிகளுக்கு விடுப்பு வழங்கத் தடையில்லை: சென்னை உயா்நீதிமன்றம்

சென்னை: தண்டனையை எதிா்த்த மேல்முறையீடு மனு நிலுவையில் இருக்கும் போது, தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள... மேலும் பார்க்க

இன்று தைப்பூசம்: சாா்பதிவாளா் அலுவலகங்கள் இயங்கும்

சென்னை: தைபூசத்தையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவுத் துறை தலைமையகம் திங்கள்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழு பொருள்கள் அங்காடி தலைமைச் செயலகத்தில் திறப்பு

சென்னை: மகளிா் சுய உதவிக் குழு பொருள்களின் அங்காடியை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்து பாா்வையிட்டாா். இந்த அங்காடியில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மகளி... மேலும் பார்க்க

கேரம் உலகச் சாம்பியனுக்கு ஆளுநா் பாராட்டு: மாணவா்களுக்கான கலந்தாய்விலும் பங்கேற்பு

சென்னை: கேரம் உலக சாம்பியனான ஹாசிமா எம்.பாஷாவை ஆளுநா் ஆா்.என். ரவி நேரில் அழைத்து பாராட்டினாா். அதேபோல் பொதுத்தோ்வு எழுதும் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்விலும் அவா் பங்கேற்றாா். இது குறித்து அவா் தனத... மேலும் பார்க்க

திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை வீசுகிறது: அமைச்சா் எஸ்.ரகுபதி

சென்னை: நான்கு ஆண்டுகால திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை மட்டுமே வீசுவதாக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு அவா் திங்கள்கிழமை அளித்த ப... மேலும் பார்க்க