செய்திகள் :

` மின்சாரம் துண்டிப்பு; சூரிய ஒளி வராத தனிச்சிறை' - உருக்கமான கடிதம் எழுதிய இம்ரான் கான்

post image
ஊழல் வழக்கில் கைதாகி தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்.

அந்தக் கடிதத்தில், ``தற்போது ராணுவத்திற்கும், மக்களுக்கும் இடையே வளர்ந்து வரும் இடைவெளி தான் என்னை இந்தக் கடிதம் எழுதத் தூண்டியது.

நாட்டின் மிக முக்கியமான அமைப்பு ராணுவம். ஆனால், அதில் இருக்கும் சில கருப்பு ஆடுகளால் அதன் புகழ் பாதிப்படைகின்றது. அப்படியான ஒருவர் தான் அடியாலா சிறையில் இருக்கும் கர்னல். அவர் மனித உரிமைகளையும், அரசியலமைப்புகளையும் மீறி நடந்துகொள்கிறார். அவர் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறுகிறார்.

அடியாலா சிறையில் முன்னாள் சூப்பிரண்டன்ட் சட்டத்தையும், விதிமுறைகளையும் பின்பற்றியதற்காகக் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டார். இப்போது ஒட்டுமொத்த சிறை அதிகாரிகளும் கர்னலால் மிரட்டப்பட்டுள்ளனர்.

நான் மரண தண்டனை செல்லில் உள்ள தனியறையில் 20 நாட்கள் வைக்கப்பட்டிருந்தேன். அங்கே சூரிய ஒளிக்கூட வராது. 5 நாட்களுக்கு என்னுடைய செல்லில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அந்த ஐந்து நாட்களும் முழுவதுமாக இருட்டில் தான் இருந்தேன்.

உடற்பயிற்சி கருவிகள், டிவி, செய்தித்தாள்கள் எதுவும் எனக்குக் கொடுக்கப்படவில்லை.

நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மாறாக, கடந்த ஆறு மாதங்களில் என்னுடைய மகன்களிடம் பேச மூன்று முறை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளேன். இது என்னுடைய அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகும்.

நீண்ட தூரம் பயணம் செய்து என்னுடைய கட்சி உறுப்பினர்கள் என்னை பார்க்க வந்திருந்தார்கள். ஆனால், அவர்களை அனுமதிக்கவில்லை. ஆறு மாதங்களில், குறிப்பிட்ட சிலரை மட்டுமே பார்க்க அனுமதித்திருக்கிறார்கள். இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக, என்னை இன்னொரு சிறையில் இருக்கும் என் மனைவியைப் பார்க்க அனுமதிக்கவில்லை.

என் மேல் இருக்கும் வழக்குகளை மிகுந்த அழுத்தம் கொண்டு முடிவு செய்ய வைக்கிறார்கள். நீதிபதிகளுக்கு அதிகம் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் நீதிபதி ஒருவருக்கு ஐந்து முறை ரத்த அழுத்தம் எகிறிவிட்டது.

என்னையும், என் மனைவியையும் சிறையில் அடைக்கக் கொடுக்கப்படும் அழுத்தம் குறித்து நீதிபதியே என்னுடைய வழக்கறிஞரிடம் கூறியுள்ளார்" என்று தனது தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கடிதம் எக்ஸ் தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

Modi: "நீங்கள் ரோபோக்கள் அல்ல; தேர்வுதான் எல்லாம் என்று வாழக்கூடாது" - மாணவர்களுக்கு மோடி அறிவுரை

கடந்த 2018ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும், 'பரிக்சா பே சார்ச்சா' என்ற தலைப்பில் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அவ்வகையில் டெல்லியில் இன்று (பிப்ரவரி 10) மாணவர்... மேலும் பார்க்க

Vijay : '2 மணி நேரத்துக்கும் மேலாக முக்கிய மீட்டிங்' - விஜய், பிரஷாந்த் கிஷோர் சந்திப்பின் பின்னணி!

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோருடன் தவெக தலைவர் விஜய் திடீர் சந்திப்பை நிகழ்த்தியிருக்கிறார். சந்திப்பின் பின்னணி என்ன என்பதை விசாரித்தோம்.விஜய்கட்சி தொடங்கி ஓராண்டை நிறைவு செய்யவிருந்த நிலை... மேலும் பார்க்க

”குடமுழுக்கா இல்லை திமுக கட்சிக் கூட்டமா?" - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரைச் சாடும் பாஜக; பின்னணி என்ன?

தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. தஞ்சாவூர் அரண்மனை தேஸ்வதானம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் இக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோயில் குட... மேலும் பார்க்க

"பெரியாரை வீழ்த்தும் முயற்சி... மூக்குடைபட்டார்கள்" - முதல்வரை சந்தித்தபின் திருமாவளவன் பேட்டி

தலைமைச் செயலகத்தில் நடந்த, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சந்திரகுமார் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார் தொல். திருமாவளவன். தொடர்ந்து முலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன... மேலும் பார்க்க

மாட்டு வண்டியில் வந்த எடப்பாடி; ஆப்சன்ட் ஆன செங்கோட்டையன் - அவிநாசி அத்திக்கடவு விழா துளிகள்

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான, "அவிநாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றியதற்கு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு அவிநாசி அத்திக்கடவு ... மேலும் பார்க்க