செய்திகள் :

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

post image

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று அதிகாலை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கை, கால் உடைந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது.

இதன்காரணமாக வேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து கர்ப்பிணி பெண் மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதிகமான ரத்தம் தேவைப்பட இருப்பதால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதிமுக பலவீனம் அடையக் கூடாது: திருமாவளவன்

இந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிய வந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் ஐ.சி.யூ.வில் உள்ளார். வயிற்றில் உயிரிழந்த 4 மாத சிசுவை அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் பெண்ணின் வலது கால் முட்டி, முதுகு தண்டுவடத்தில் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்!

தமிழகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் 30 வயது வரை உள்ள பெண்கள் 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடங்கி வ... மேலும் பார்க்க

தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து சிறப்பு ரயில்கள்!

தைப்பூசத்தையொட்டி கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.இதுகுறித்து தெற்... மேலும் பார்க்க

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு பழைய கரூர் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் தூத்துக்குடியில் போட்டித்தேர்வு பயிற... மேலும் பார்க்க

டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் கும்கி யானை ராமு மரணம்

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த கும்கி யானை ராமு உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் உள்ள... மேலும் பார்க்க

டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு!

டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 10-02-2025: தென்தமிழக கடலோரப்ப... மேலும் பார்க்க

ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புது தில்லி: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதாக, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி... மேலும் பார்க்க