செய்திகள் :

தில்லி தேர்தலில் வாக்களித்த குடியரசுத் தலைவர், ஜெய்சங்கர், ராகுல்!

post image

தில்லிப் பேரவைத் தேர்தலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி ஆகியோர் வாக்களித்தனர்.

தலைநகரான தில்லியில் பேரவைத் தேர்தலில் 1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 70 தொகுதிகளில் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு 13,766 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க | ரூ.5 லட்சத்துடன் தில்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் இருவர் கைது!

இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஆம் ஆத்மி தலைவரும் தில்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, தில்லி காவல் துறை ஆணையர் சஞ்சய் அரோரா, தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி ஆர். ஆலிஸ் வாஸ், தில்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, அவரது மனைவி சங்கீதா சக்சேனா ஆகியோரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆம் ஆத்மி கட்சியின் கைலாஷ் தொகுதி வேட்பாளர் சௌரப் பரத்வாஜ், பாஜகவின் கரவால் நகர் வேட்பாளர் கபில் மிஸ்ரா, காங்கிரஸின் புது தில்லி வேட்பாளர் சந்தீப் தீக்‌ஷித் மற்றும் கல்காஜி வேட்பாளர் அல்கா லம்பா ஆகியோரும் தங்களது தொகுதிகளில் வாக்களித்தனர்.

காலையில் பனிப்பொழிவால் வாக்குப் பதிவு மந்தமாகக் காணப்பட்டது. இந்த வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவிருக்கிறது.

இதையும் படிக்க |தில்லி தேர்தல்: பிரதமர் மோடி, கேஜரிவால், அதிஷி வாழ்த்து!

தில்லி தேர்தல்: சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி வாக்களித்தனர்!

தில்லி பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வாக்களித்தனர். தலைநகர் தில்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொட... மேலும் பார்க்க

டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்! சாதனை படைத்த ரஷீத்கான்!

டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ரஷீத்கான் புதிய சாதனை படைத்துள்ளார்.ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான், ஐபிஎல், பிபிஎல், சிபிஎல், பிக்-பாஸ் உள்... மேலும் பார்க்க

கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் நீராடிய பிரதமர் மோடி!

பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை காலை புனித நீராடினார்.பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று... மேலும் பார்க்க

அமெரிக்க விமானத்தில் வரும் இந்தியர்களின் குற்றப் பின்னணியை சரிபார்க்கும் என்ஐஏ!

அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களுடன் வந்துகொண்டிருக்கும் விமானம் இன்னும் சற்றுநேரத்தில் பஞ்சாபில் தரையிறங்கவுள்ளது.சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களில் முதல்கட்டமாக குறிப்பிட... மேலும் பார்க்க

தில்லி பேரவைத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

தில்லி பேரவைத் தேர்தலில் காலை 9 மணி நிலவரம் குறித்த விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தலைநகரான தில்லியில் பேரவைத் தேர்தலில் 1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலைய... மேலும் பார்க்க

முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவருந்தலாம்: மோடி வலியுறுத்தல்

புதுதில்லி: தில்லி பேரவைத் தேர்தலையொட்டி, முதல் முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளம் வாக்காளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவருந்தலாம் ... மேலும் பார்க்க