செய்திகள் :

வால்பாறை: எச்சரித்த வனத்துறை... கண்டுகொள்ளாத ஜெர்மன் பயணி - பைக்குடன் தூக்கி வீசி தாக்கிய யானை!

post image

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம்  இருக்கும். தற்போது யானைகள் வலசை காலம் என்பதால் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில்  ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மைக்கேல் என்ற சுற்றுலா பயணி ஒருவர் ராயல் என்ஃபீல்ட் பைக்கில் நேற்று மாலை வால்பாறை மலை பகுதியில் செல்ல முயற்சித்துள்ளார்.

பைக்கில் சென்ற சுற்றுலா பயணி

யானைகள் நடமாட்டம் இருப்பதால் இருசக்கர வாகனத்தில்  செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் அவரை எச்சரித்துள்ளனர்.

ஆனால் வனத்துறையின் எச்சரிக்கையை உதாசீனப்படுத்திவிட்டு அவர் வேகமாக சென்றுள்ளார். டைகர் பள்ளத்தாக்கு காட்சி முனை அருகே ஒற்றை யானை நின்று கொண்டிருந்தது. சக பயணிகள் சிலர் யானை செல்வதற்காக காத்திருந்தனர்.

பைக்

மைக்கேல் அதையும் கேட்காமல் பைக்கில் வேகமாக யானையின் அருகிலேயே சென்றுவிட்டார். இதனால் யானை அவரை பைக்குடன் தூக்கி வீசி தாக்கியது. யானை அங்கிருந்து மீண்டும் செல்ல முயற்சித்தபோது, மைக்கேல் எழுந்து தப்பி செல்ல முயற்சித்தார்.

அப்போது யானை அவரை மீண்டும் தாக்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த மைக்கேல்

வனத்துறை எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல், யானை நின்று கொண்டிருக்கும்போதே அருகில் சென்றதால் தான் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. எனவே வால்பாறை செல்லும் மக்கள் எங்கள் அறிவிப்புகளை பின்பற்ற வேண்டும் என்று வனத்துறை கூறியுள்ளது.

`நாங்க காதலிக்கிறோம்’ - 17 வயது சிறுமியை கடத்திச்சென்று, வன்கொடுமை செய்ததாக இளம்பெண் கைது

மும்பை கொலாபா பகுதியை சேர்ந்த 17 வயது மைனர் பெண் கடந்த மாதம் திடீரென காணாமல் போய்விட்டார். அவர் கடந்த மாதம் 7ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.... மேலும் பார்க்க

நெல்லையில் திருடிய ஸ்கூட்டர்... கோவில்பட்டியில் மீட்பு; விருதுநகர் பெண் கைது!

Aநெல்லை மாவட்டம், தச்சநல்லூரைச் சேர்ந்தவர் குமார். இவர், அப்பகுதியில் வாட்டர் சர்வீஸ் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மதியம் வேலை முடிந்து சாப்பிடுவதற்காக குமார், தனது வீட்டி... மேலும் பார்க்க

கொள்ளை அடித்த பணத்தில் நடிகைகளுடன் நெருக்கம்; காதலிக்கு ரூ.3 கோடிக்கு வீடு - சிக்கிய பலே கொள்ளையன்

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளை நோட்டம்விட்டு பூட்டை உடைத்து திருடிய நபர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் தேனீர் கடை நடத்தி வந்த பஞ்சாக்ஷரி சங்கய்ய சுவாமி(37) என்ற அந்த... மேலும் பார்க்க

Sweden: "டெஸ்குக்கு கீழ் ஒளிந்துகொண்டோம்..." - சுவீடன் பள்ளியில் நடந்த கொடூரத் துப்பாக்கிச் சூடு

சுவீடனில் பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கிட்டதட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் அந்நாட்டு போலீசார் கூறுகையில், "பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச... மேலும் பார்க்க

மும்பை: "கடன திரும்ப தா இல்ல என்ன கல்யாணம் பண்ணு" - மிரட்டிய காதலியைக் குத்திக் கொன்ற காதலன்

மும்பை அருகில் உள்ள அம்பர்நாத்தில் கொடுத்த கடனைத் திரும்பக் கேட்டு சித்ரவதை செய்த காதலியைக் காதலன் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.அம்பர்நாத்தில் வசித்து வந்தவர் சீ... மேலும் பார்க்க

கோவை: திருமணம் கடந்த உறவு - மனைவியின் காதலனை கொன்ற கணவன்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல் (56). இவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியுடன் திருப்பூர் மாவட்டம... மேலும் பார்க்க