செய்திகள் :

தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை! மூவருக்கு தலா ரூ. 60.5 லட்சம் அபராதம்!

post image

தமிழக மீனவர்கள் 19 பேருக்கு அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் விடுவித்துள்ளது. அபராதம் கட்டத் தவறும் பட்சத்தில், சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ராமேசுவரத்தில் இருந்து கடந்த ஜன. 26 ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 34 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அந்நாட்டின் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க : எச்-1பி, எல்-1 விசா வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்! இந்தியர்களுக்கு பாதிப்பு!

இந்த நிலையில், 19 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 16 பேருக்கு தலா ரூ. 50,000 அபராதமும், படகு ஓட்டிய 3 மீனவர்களுக்கு தலா ரூ. 60.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராதத் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் 16 பேருக்கு 6 மாதமும் 3 பேருக்கு ஓராண்டும் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மீதமுள்ள 15 மீனவர்களின் படகு எண் தவறாக இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் மறுத்துள்ளது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரி 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்.

இதனிடையே, விடுவிக்கப்பட்ட 19 மீனவர்களை தமிழகத்துக்கு அனுப்பும் பணியை இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

மெளனம் பேசியதே தொடரில் ஜோவிதாவுக்கு பதிலாக புதிய நடிகை!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மெளனம் பேசியதே தொடரில் நடித்துவந்த நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டன் அத்தொடரில் இருந்து விலகியுள்ளார். ஜோவிதாவுக்கு பதிலாக நடிகை ஃபெளசி அத்தொடரில் நாயகியாக நடிக்கவுள்... மேலும் பார்க்க

காலியாக இயக்கப்பட்ட கோவை - திண்டுக்கல் முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கோவையிலிருந்து திண்டுக்கல் இடையே இன்று முதல் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.ஆனால், இந்த சிறப்பு ரயில் பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் முதல் ந... மேலும் பார்க்க

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: 7 பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் ஏழு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.வெ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: ஆசிரியர்கள் 3 பேர் கைது!

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மா... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் ஓடும் ஆட்டோவில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நின்றிருந்த 18 வயது மேற்கு வங்க சிறுமி ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்பட மூன்று பேரை காவல்துறைய... மேலும் பார்க்க

தைப்பூசம்: பழனி முருகன் கோயிலில் கொடியேற்றம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள முருகன் கோயிலில், ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் 5-ஆம் தேதி ... மேலும் பார்க்க