செய்திகள் :

கிளாம்பாக்கத்தில் ஓடும் ஆட்டோவில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்!

post image

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நின்றிருந்த 18 வயது மேற்கு வங்க சிறுமி ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

பெண்ணை ஆட்டோ ஓட்டுநர் கடத்திச் செல்வதை அறிந்த அப்பகுதியில் இருந்த சிலர், உடனடியாகக் காவல்துறைக் கட்டுப்பாட்டு மையத்துக்கு தொடர்புகொண்டு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் விரட்டிச் சென்றதால், பெண்ணை பாதி வழியில் இறக்கிவிட்டு குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தாம்பரம் காவல்துறை ஆணையர் கூறுகையில், அந்தச் சிறுமி மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். சேலத்தில் பணியாற்றி வந்துள்ளார். மாதவரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருவதற்காக சேலத்திலிருந்து திங்கள்கிழமை சென்னைக்குப் பேருந்தில் வந்துள்ளார். திங்கள்கிழமை இரவு அந்தப் பேருந்து கிளாம்பாக்கம் வந்துள்ளார். பேருந்து நிலையத்துக்கு வெளியே மாதவரம் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்த போது, அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர், மாதவரத்தில் விட்டுவிடுவதாகக் கூறியிருக்கிறார். ஆனால், அப்பெண் மறுத்துவிட்டதால், ஆட்டோ ஓட்டுநர், அப்பெண்ணை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றிச் சென்றிருக்கிறார்.

ஆட்டோ சிறிது தொலைவு சென்றதும், மேலும் சிலரும் ஆட்டோவில் ஏறியிருக்கிறார்கள். அவரது கழுத்தில் கத்தியை வைத்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

ஆட்டோ ஜிஎஸ்டி சாலை மற்றும் இரும்புலியூர் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, பெண்ணிக் அலறல் சப்தம் கேட்ட அப்பகுதியினர், காவல்துறை கட்டுப்பாட்டு மையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

உடனடியாக விரைந்து சென்ற காவல்துறை வாகனம், ஆட்டோவை விரட்டிச் சென்ற போது, நெற்குன்றம் அருகே ஆட்டோவை நிறுத்தி அப்பெண்ணை இறக்கிவிட்டுவிட்டு அவர்கள் தப்பியோடியுள்ளனர். மூவரையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

மெளனம் பேசியதே தொடரில் ஜோவிதாவுக்கு பதிலாக புதிய நடிகை!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மெளனம் பேசியதே தொடரில் நடித்துவந்த நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டன் அத்தொடரில் இருந்து விலகியுள்ளார். ஜோவிதாவுக்கு பதிலாக நடிகை ஃபெளசி அத்தொடரில் நாயகியாக நடிக்கவுள்... மேலும் பார்க்க

காலியாக இயக்கப்பட்ட கோவை - திண்டுக்கல் முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கோவையிலிருந்து திண்டுக்கல் இடையே இன்று முதல் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.ஆனால், இந்த சிறப்பு ரயில் பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் முதல் ந... மேலும் பார்க்க

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: 7 பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் ஏழு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.வெ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: ஆசிரியர்கள் 3 பேர் கைது!

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மா... மேலும் பார்க்க

தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை! மூவருக்கு தலா ரூ. 60.5 லட்சம் அபராதம்!

தமிழக மீனவர்கள் 19 பேருக்கு அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் விடுவித்துள்ளது. அபராதம் கட்டத் தவறும் பட்சத்தில், சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.ராமேசுவரத்தில் இருந்து கடந்த ஜன. 26 ஆம் தேத... மேலும் பார்க்க

தைப்பூசம்: பழனி முருகன் கோயிலில் கொடியேற்றம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள முருகன் கோயிலில், ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் 5-ஆம் தேதி ... மேலும் பார்க்க