செய்திகள் :

சுதந்திர பாலஸ்தீனம் உருவானால்தான் தூதரக உறவு: செளதி அரேபியா!

post image

சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்கிய பிறகே இஸ்ரேலுடன் தூதரக ரீதியிலான உறவை மேற்கொள்வோம் என்று செளதி அரேபியா தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கிடையே வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், காஸாவை கைப்பற்றி அமெரிக்க ராணுவத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படும் என்று அறிவித்தார்.

மேலும், காஸா முனையில் உள்ள பாலஸ்தீனியர்கள் எகிப்து மற்றும் ஜோர்டான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுவர் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்க : காஸாவைக் கைப்பற்றும் அமெரிக்கா: டிரம்ப் அறிவிப்பு!

டிரம்பின் அறிவிப்பை எதிர்த்து, செளதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவித்திருப்பதாவது:

“பாலஸ்தீனத்தில் சுதந்திரமான அரசை ஏற்படுத்துவதில் செளதி அரேபியாவின் நிலைப்பாடு உறுதியானது, அதனை யாரும் மாற்ற முடியாது என்பதை வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்துகிறது.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஷூரா கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவை எங்களின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் செளத் தெளிவாக தெரிவித்திருந்தார்.

கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்டு சுதந்திர பாலஸ்தீன நாட்டை உருவாக்க செளதி அரேபியா தனது இடைவிடாத முயற்சிகளை தொடரும். இதனை ஏற்படுத்தாமல் இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை செளதி அரேபியா ஏற்படுத்தாது.

இஸ்ரேலிய குடியேற்றக் கொள்கைகள் மூலம் நில இணைப்பு அல்லது பாலஸ்தீன மக்களை அவர்களின் நாட்டுக்குள் இடம்பெயரச் செய்வதை செளதி அரேபியா நிராகரிப்பதை மீண்டும் உறுதிபடுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கோவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை; எரித்துக் கொலை!

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அதன் அண்டை நாடான ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சியாளா்களால் உள்நாட்டில் கலவரம் மூண்டுள்ளது.தாது வளம் நிறைந்த காங்கோவில் செயல்படும் நூற்றுக்கணக்கான கிளா்ச்... மேலும் பார்க்க

காஸாவைக் கைப்பற்றும் அமெரிக்கா: டிரம்ப் அறிவிப்பு!

காஸாவை அமெரிக்கா கைப்பற்றவிருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, உலகில் போர் நடக்க விடமாட்டேன் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில், இஸ்ரேல... மேலும் பார்க்க

டிரம்ப் மகனுக்கு சிறை தண்டனை வழங்கும் இத்தாலி?

இத்தாலியில் பாதுகாக்கப்பட்ட பறவையினங்களை வேட்டையாடிதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் டிரம்ப் ஜூனியர் மீது இத்தாலி அரசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்... மேலும் பார்க்க

எச்-1பி, எல்-1 விசா வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்! இந்தியர்களுக்கு பாதிப்பு!

எச்-1பி, எல்-1 விசாக்களின் அனுமதி காலம் நிறைவடைந்தால், அதனை 180 நாள்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டுவர அமெரிக்க செனட் உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.அமெரிக்காவில் ஜோ பை... மேலும் பார்க்க

திருநங்கைகள் மகளிர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தடை: கையெழுத்திடுகிறார் டிரம்ப்

திருநங்கைகளாக மாறியவர்கள் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பிறப்பால் ஆ... மேலும் பார்க்க

ஸ்வீடன் கல்வியகத்தில் துப்பாக்கிச்சூடு: 5 போ் காயம்

ஸ்வீடனின் ஆரெப்ரோ நகரிலுள்ள வயதுவந்தோருக்கான கல்வி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஐந்து போ் காயமடைந்தனா்.இது குறித்து போலீஸாா் கூறியதாவது:தலைநகா் ஸ்டாக்ஹோமுக்கு சுமாா் 2... மேலும் பார்க்க