செய்திகள் :

திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் ராகுல், அகிலேஷ்!

post image

பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தில்லியில் திமுக மாணவரணி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, தில்லி ஜந்தா் மந்தரில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ஏஐ செயலிகளை பயன்படுத்த வேண்டாம்: ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்

இதுகுறித்து திமுக மாணவரணிச் செயலா் சி.வி.எம்.பி.எழிலரசன் தில்லியில் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

”கல்வியை ஒட்டுமொத்தமாக அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தார்கள், தற்போது கூட்டாட்சிக்கு எதிரான வரைவுகளை யுஜிசி மூலம் வெளியிட்டுள்ளனர்.

இந்த யுஜிசி வரைவை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து நிறைவேற்றியுள்ளார். முதல்வரின் உத்தரவை தொடர்ந்து தில்லியில் போராட்டம் நடத்த அறிவுறுத்தியுள்ளார்.

திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் பங்கேற்கவுள்ளார்கள். காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, சமாஜவாதியின் அகிலேஷ் யாதவ் பங்கேற்கிறார்கள்.

விசிக, இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்” என்றார்.

கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை! -இபிஎஸ்

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை:சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: ‘கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 13 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூவரால் பாலியல... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

மதுரை திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அமைதி பேணுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கமளித்துள்ளார்.திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து மதுரை ஆட்சியர் சங்கீதா அறிக்கை ஒன்... மேலும் பார்க்க

கோவை: திருமணம் மீறிய உறவால் ஒருவர் கொலை!

கோவையில் மனைவியுடன் இருந்த கள்ளக் காதலனை வெட்டி படுகொலை செய்த கணவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.தஞ்சாவூரைச் சேர்ந்தவர் பிரபாகரன் ( 45). இவரது மனைவி மதுரையை சேர்ந்த வாணிப்பிரியா (42). இவர்களுக்கு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக அமைச்சர்களுக்கு அண்ணாமலை கண்டனம்?

திருப்பரங்குன்ற விவகாரத்தில் பாஜகவினரை குற்றம் சாட்டிய அமைச்சர்களின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழகத்தில் பாஜக கலவரத்தை ஏற்படுத்த... மேலும் பார்க்க

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 2 நிரந்தர நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள இரண்டு கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. தில்லியில் நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் கூட்டத்தில், செ... மேலும் பார்க்க

மெளனம் பேசியதே தொடரில் ஜோவிதாவுக்கு பதிலாக புதிய நடிகை!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மெளனம் பேசியதே தொடரில் நடித்துவந்த நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டன் அத்தொடரில் இருந்து விலகியுள்ளார். ஜோவிதாவுக்கு பதிலாக நடிகை ஃபெளசி அத்தொடரில் நாயகியாக நடிக்கவுள்... மேலும் பார்க்க