செய்திகள் :

கோவை: திருமணம் கடந்த உறவு - மனைவியின் காதலனை கொன்ற கணவன்

post image

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல் (56). இவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியுடன் திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே வசித்து வந்தார்.

முருகவேல்

அங்கு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனியாண்டி (39) என்பவர் பழக்கமாகியுள்ளார். முனியாண்டி ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வந்தார்.

இதனிடையே முருகவேல் மனைவிக்கும், முனியாண்டிக்கும் திருமணம் கடந்த உறவு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த முருகவேல் இருவரையும் கண்டித்துள்ளார். இதையடுத்து முருகவேல் கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள வடுகன் காளிபாளையத்துக்கு குடிபெயர்ந்துள்ளார்.

முனியாண்டி

இருப்பினும் அவர்களின் திருமணம் கடந்த உறவு தொடர்ந்துள்ளது.  இந்நிலையில் நேற்று மாலை முருகவேல் பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது முருகவேல் மனைவி வீட்டில் இல்லை. உடனடியாக அவர் முனியாண்டியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்த முருகவேல் ஆத்திரமடைந்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், முருகவேல் முனியாண்டியின் நெஞ்சு பகுதியில் கத்தியால் சரமாரியாக குத்தினார். முருகவேல் மனைவி உடனடியாக முருகவேலை வீட்டில் தள்ளி கதவை அடைத்துவிட்டு, முனியாண்டியை காப்பாற்ற முயற்சித்துள்ளார்.

கைது

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குபதிந்து முருகவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை: நடுரோட்டில் சிதறிக் கிடந்த தோட்டாக்கள்; பாதுகாப்பு படை வீரரிடம் ஒப்படைப்பு..!

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம், மோதிலால் நகரைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர் நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சிக்னல் அருகே சென்றபோது அங்கு ஏ.கே.47 துப்பாக்கியின் உதிரிபாகம், 30 தோட்டாக்கள் கி... மேலும் பார்க்க

மைசூர் டு குருவாயூர், அரசுப் பேருந்தில் போதை பொருள் கடத்தல்... இளைஞர் சிக்கியது எப்படி?

எம்.டி.எம்.ஏ - என்ற பெயரில் அழைக்கப்படும் ஒருவகை போதைப்பொருளை கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு ரகசியமாக கடத்தும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் போர்வையில் பயணிக்கும் கடத்தல் கு... மேலும் பார்க்க

Karnataka: காது குத்தும் முன் மயக்க ஊசி; 6 மாத குழந்தை பரிதாப மரணம்! - உறவினர்கள் அதிர்ச்சி

கர்நாடகா மாநிலம், சாமராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பொம்மலபுரா மருத்துவமனையில் காது குத்துவதற்கு முன் குழந்தைக்கு மயக்க மருந்து செலுத்தியதில் 6 மாத ஆண் குழந்தை மரணமடைந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஹங்க... மேலும் பார்க்க

கோவை மருத்துவமனைக்குள் கத்தியுடன் நுழைந்த இளைஞர் - நூலிழையில் உயிர் தப்பிய செவிலியர்

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மருத்துவமனை வளாகத்திள் உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வருகிறார். அங்கு ஒரு இளைஞ... மேலும் பார்க்க

ஜகபர் அலி கொலை வழக்கு: குற்றவாளிகள் 5 பேரையும் 3 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க CBCID-க்கு அனுமதி!

சட்டவிரோத கனிமக் கொள்ளைக்கு எதிராக புகார் கொடுத்த புதுக்கோட்டை மாவட்டம், வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி கடந்த ஜனவரி 17-ம் தேதி அன்று குவாரி உரிமையாளர்களால் சதி திட்டம் தீட்டப்பட்... மேலும் பார்க்க

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்: இளைஞனை சுட்டுப்பிடித்த ராணிப்பேட்டை போலீஸ்!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிப்காட் காவல் நிலையத்தின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.நள்ளிரவு 12 மணியளவில், முகமூடி அணிந்து பைக்கில் வந்த அட... மேலும் பார்க்க