செய்திகள் :

வாக்குச்சாவடி முறைகேடுகளை கண்டறிய ஆம் ஆத்மியின் தன்னார்வலர் குழு!

post image

தில்லி பேரவைத் தேர்தலில் வாக்குச்சாவடி முறைகேடுகள் நடைபெறுவதைக் கண்டறிய ஆம் ஆத்மி கட்சி தன்னார்வலர் குழுக்களை அமைத்துள்ளது.

தில்லி பேரவைத் தோ்தலுக்கான அரசியல் கட்சிகளின் தோ்தல் பிரசாரம் திங்கள்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. தில்லி பேரவைத் தோ்தல் பிப்.5-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், வாக்குச் சாவடி அமைப்புகளைச் சரிபார்க்கவும், தலைமை அதிகாரியின் விவரங்களைச் சரிபார்க்கவும், வாக்குப்பதிவு நாளில் கட்டுப்பாடுகளைக் கண்காணிக்கவும் ஆம் ஆத்மி கட்சி தன்னார்வலர்கள் குழுக்களை அமைத்துள்ளது.

இதையும் படியுங்கள் | தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ. 2,300 கோடி வருவாய்: மோடி பதிலுரை

இது குறித்து ஆம் ஆத்மி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “வாக்களிப்பு நடைமுறைகளைச் சரிபார்க்கவும், முறைகேடுகளைச் சரிபார்க்கவும், மோசடிகளுக்கும் எதிராக விழிப்புடன் இருக்கவும் தனது பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்குச்சாவடி விவரங்களைச் சரிபார்க்கவும், நியமிக்கப்பட்ட தலைமை அதிகாரிகளை உறுதிப்படுத்தவும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவின் முடிவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பேட்டரி சதவீதத்தையும் தன்னார்வலர்கள் கண்காணித்து ஏதேனும் முரண்பாடுகளைக் கண்டறிவார்கள்.

தேர்தல் நாளான புதன்கிழமை இரவு, வாக்குப்பதிவு முடிந்ததும், இந்தத் தரவுகள் அனைத்தும் பதிவேற்றப்படும் ஒரு வலை போர்ட்டலையும் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் 70 தொகுதிகளுக்கான பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு புதன்கிழமையும், வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமையும் நடைபெறவிருக்கிறது.

இதையும் படியுங்கள் |மகா கும்பமேளா கூட்ட நெரிசல் மிகைப்படுத்தப்பட்ட விபத்து: ஹேம மாலினி

செல்போன் உற்பத்தியில் இந்தியாவுக்கு 2வது இடம்!

உலக அளவிலான செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டு நாட்டில் 2 மையங்கள் மட்டுமே இருந்ததாகவும், ஆனால் தற்போது 300 உற்பத்தி மையங்கள் இருப்பதாகவும... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திலிருந்து 1.55 கோடி பேர் நீக்கம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இருந்து 1.55 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது. தகுதி அற்றவர்களாக கருதப்பட்டவர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாகவும்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் மிகைப்படுத்தப்பட்ட விபத்து: ஹேம மாலினி

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் நேரிட்ட கூட்ட நெரிசல் மிகப்பெரிய நிகழ்வு அல்ல என்றும், மிகைப்படுத்தப்பட்டது எனவும் பாஜக எம்.பி., ஹேம மாலினி தெரிவித்துள்ளார். கும்பமேளா கூட்ட நெரி... மேலும் பார்க்க

தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ.2300 கோடி வருவாய்: மோடி பதிலுரை

மக்கள் பிரச்னைகள் சிலருக்குப் புரியவில்லை என பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சியினரை மறைமுகமாக சாடியுள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி நன்றி... மேலும் பார்க்க

எல்லை விவகாரங்களில் ராகுல் கூறுவது பொய்யான குற்றச்சாட்டு: ராஜ்நாத் சிங்

எல்லை சார்ந்த விஷயங்களில் ராணுவ தலைமைத் தளபதியின் அறிக்கையை விமர்சித்துப் பேசிய ராகுல் காந்திக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.தேச நலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் ... மேலும் பார்க்க

போபாலில் யாசகம் பெறவும் தானம் வழங்கவும் தடை!

போபால் : மத்திய பிரதேச தலைநகர் போபால் அமைந்துள்ள போபால் மாவட்டத்தில் பிச்சையெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, யாரேனும் யாசகம் கேட்கும்போது அவர்களுக்கு தானம் வழங்குதலும் தடை செய்யப்பட்டுள்ளது. போ... மேலும் பார்க்க