செய்திகள் :

எல்லை விவகாரங்களில் ராகுல் கூறுவது பொய்யான குற்றச்சாட்டு: ராஜ்நாத் சிங்

post image

எல்லை சார்ந்த விஷயங்களில் ராணுவ தலைமைத் தளபதியின் அறிக்கையை விமர்சித்துப் பேசிய ராகுல் காந்திக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேச நலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் செயல்படுவது வருத்தம் அளிப்பதாவும் விமர்சித்துள்ளார்.

இந்தியா - சீனா எல்லை நிலவரத்தில் ராணுவ தளபதி வெளியிட்ட அறிக்கை குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளை மக்களவையில் ராகுல் காந்தி நேற்று (பிப். 3) கூறியுள்ளார்.

ராணுவ தளபதியின் கருத்துகள் இருபுறமும் எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பாரம்பரிய ரோந்துப் பணிகள் குறித்து மட்டுமே கூறப்பட்டிருந்தது. அண்மைக் காலமாக நீக்கப்பட்டிருந்த இந்த பாரம்பரிய நடைமுறை மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தகவல்கள் நாடாளுமன்றத்திலும் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

ராணுவ தலைமைத் தளபதி எங்கும் ராகுல் காந்தியை எங்கும் குறிப்பிட்டுப் பேசவில்லை. தேச நலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் செயல்படுவது வருத்தம் அளிக்கிறது.

சீனா நுழைந்த இந்தியப் பகுதி ஏதேனும் இருந்தால், அது 1962 மோதலின் விளைவாக அக்சாய் சின்னில் 38,000 சதுர கி.மீ. மற்றும் 1963 -ல் பாகிஸ்தான் சீனாவிற்கு சட்டவிரோதமாக விட்டுக்கொடுத்த 5,180 சதுர கி.மீ. ஆகும். நம் வரலாற்றின் இப்பகுதியை ராகுல் காந்தி சுயபரிசோதனை செய்ய வேண்டும் என ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார்.

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திலிருந்து 1.55 கோடி பேர் நீக்கம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இருந்து 1.55 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது. தகுதி அற்றவர்களாக கருதப்பட்டவர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாகவும்... மேலும் பார்க்க

வாக்குச்சாவடி முறைகேடுகளை கண்டறிய ஆம் ஆத்மியின் தன்னார்வலர் குழு!

தில்லி பேரவைத் தேர்தலில் வாக்குச்சாவடி முறைகேடுகள் நடைபெறுவதைக் கண்டறிய ஆம் ஆத்மி கட்சி தன்னார்வலர் குழுக்களை அமைத்துள்ளது.தில்லி பேரவைத் தோ்தலுக்கான அரசியல் கட்சிகளின் தோ்தல் பிரசாரம் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் மிகைப்படுத்தப்பட்ட விபத்து: ஹேம மாலினி

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் நேரிட்ட கூட்ட நெரிசல் மிகப்பெரிய நிகழ்வு அல்ல என்றும், மிகைப்படுத்தப்பட்டது எனவும் பாஜக எம்.பி., ஹேம மாலினி தெரிவித்துள்ளார். கும்பமேளா கூட்ட நெரி... மேலும் பார்க்க

தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ.2300 கோடி வருவாய்: மோடி பதிலுரை

மக்கள் பிரச்னைகள் சிலருக்குப் புரியவில்லை என பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சியினரை மறைமுகமாக சாடியுள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி நன்றி... மேலும் பார்க்க

போபாலில் யாசகம் பெறவும் தானம் வழங்கவும் தடை!

போபால் : மத்திய பிரதேச தலைநகர் போபால் அமைந்துள்ள போபால் மாவட்டத்தில் பிச்சையெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, யாரேனும் யாசகம் கேட்கும்போது அவர்களுக்கு தானம் வழங்குதலும் தடை செய்யப்பட்டுள்ளது. போ... மேலும் பார்க்க

முதல் முறை.. குடியரசுத் தலைவர் மாளிகையில் சிஆர்பிஎஃப் வீராங்கனைக்கு திருமணம்!

புது தில்லியில் அமைந்துள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், சிஆர்பிஎஃப் வீராங்கனை பூனம் குப்தாவுக்கு திருமண வைபவம் நடைபெறவிருக்கிறது. இங்கு தனிநபரின் நிகழ்ச்சி ஒன்று நடைபெறுவது இதுவே முதல் முறை என தகவல்க... மேலும் பார்க்க