செய்திகள் :

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் மிகைப்படுத்தப்பட்ட விபத்து: ஹேம மாலினி

post image

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் நேரிட்ட கூட்ட நெரிசல் மிகப்பெரிய நிகழ்வு அல்ல என்றும், மிகைப்படுத்தப்பட்டது எனவும் பாஜக எம்.பி., ஹேம மாலினி தெரிவித்துள்ளார்.

கும்பமேளா கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை அரசு வெளியிடவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், ஹேம மாலினி கூறிய இந்தக் கருத்து சர்ச்சையாகியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் ‘திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.

மௌனி அமாவாசை நாளான ஜன. 29 ஆம் தேதி திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராட குவிந்தனர். இதன் விளைவாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 30 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே மக்களவையில் இது குறித்துப் பேசிய சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கும்பமேளாவில் இறந்தவர்களின் எண்ணிக்கையை அரசு மூடி மறைப்பதாக குற்றம் சாட்டினார்.

''மகா கும்பமேளாவில் இறந்தவர்களின் புள்ளிவிவரங்களை வெளியிட ஏன் மறுக்கிறீர்கள். அவை மறைக்கப்பட்டிருக்கிறதா? அழிக்கப்பட்டிருக்கிறதா?

இறந்தவர்களின் உடல்கள் டிராக்டர் மூலமாக கொண்டு செல்லப்பட்டன. உ.பி. மாநில அரசு இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை மறைக்கிறது'' என அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பாஜக எம்.பி., ஹேம மாலினி பதிலளித்ததாவது,

’’மகா கும்பமேளாவுக்குச் சென்று புனித நீராடினோம். அனைத்து வசதிகளும் சரியான முறையில் செய்யப்பட்டிருந்தது. ஆனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது உண்மைதான். இது மிகப்பெரிய நிகழ்வு அல்ல. இது எவ்வளவு தீவிரமானது எனத் தெரியவில்லை. இது மிகைப்படுத்தப்பட்டுள்ளது. கும்பமேளா சிறப்பாக நிர்வகிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான மக்கள் வருகின்றனர். இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது சிரமம். ஆனால், எங்களால் முடிந்ததை சிறப்பாகச் செய்துள்ளோம்’’ எனக் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகள் உண்மையான பலி எண்ணிக்கையை வெளியிட வேண்டும் எனக் கோருவது குறித்து பதிலளித்த ஹேம மாலினி, ’’அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் சொல்வார்கள். தவறாகச் சொல்வதே அவர்கள் வேலை’’ என விமர்சித்தார்.

இதையும் படிக்க | தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ. 2,300 கோடி வருவாய்: மோடி பதிலுரை

செல்போன் உற்பத்தியில் இந்தியாவுக்கு 2வது இடம்!

உலக அளவிலான செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டு நாட்டில் 2 மையங்கள் மட்டுமே இருந்ததாகவும், ஆனால் தற்போது 300 உற்பத்தி மையங்கள் இருப்பதாகவும... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திலிருந்து 1.55 கோடி பேர் நீக்கம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இருந்து 1.55 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது. தகுதி அற்றவர்களாக கருதப்பட்டவர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாகவும்... மேலும் பார்க்க

வாக்குச்சாவடி முறைகேடுகளை கண்டறிய ஆம் ஆத்மியின் தன்னார்வலர் குழு!

தில்லி பேரவைத் தேர்தலில் வாக்குச்சாவடி முறைகேடுகள் நடைபெறுவதைக் கண்டறிய ஆம் ஆத்மி கட்சி தன்னார்வலர் குழுக்களை அமைத்துள்ளது.தில்லி பேரவைத் தோ்தலுக்கான அரசியல் கட்சிகளின் தோ்தல் பிரசாரம் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ.2300 கோடி வருவாய்: மோடி பதிலுரை

மக்கள் பிரச்னைகள் சிலருக்குப் புரியவில்லை என பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சியினரை மறைமுகமாக சாடியுள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி நன்றி... மேலும் பார்க்க

எல்லை விவகாரங்களில் ராகுல் கூறுவது பொய்யான குற்றச்சாட்டு: ராஜ்நாத் சிங்

எல்லை சார்ந்த விஷயங்களில் ராணுவ தலைமைத் தளபதியின் அறிக்கையை விமர்சித்துப் பேசிய ராகுல் காந்திக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.தேச நலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் ... மேலும் பார்க்க

போபாலில் யாசகம் பெறவும் தானம் வழங்கவும் தடை!

போபால் : மத்திய பிரதேச தலைநகர் போபால் அமைந்துள்ள போபால் மாவட்டத்தில் பிச்சையெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, யாரேனும் யாசகம் கேட்கும்போது அவர்களுக்கு தானம் வழங்குதலும் தடை செய்யப்பட்டுள்ளது. போ... மேலும் பார்க்க