செய்திகள் :

உலகளாவிய வங்கிக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்த உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி!

post image

புதுதில்லி: உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி இன்று உலகளாவிய வங்கி உரிமத்திற்கான விண்ணப்பத்தை இந்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை வங்கியின் நீண்டகால பார்வையுடன் ஒத்துப்போகிறது என்று உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விண்ணப்பத்திற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்தால் வங்கியின் பரிணாம வளர்ச்சியில் இது மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படும். யுனிவர்சல் பேங்கிங் உரிமம் அங்கீகரிக்கப்பட்டால், தனது வாடிக்கையாளர்களுக்கு முழுமையான நிதி சேவைகளை வழங்குவதற்கான முயற்சிகளை வலுப்படுத்தி, தீர்வுகளை வழங்கும் அதே வேளையில் யுனிவர்சல் வங்கிகளின் வரிசையில் அடி எடுத்து வைக்க தயாராக உள்ளது.

கடந்த ஆண்டு, ஏயூ ஸ்மால் பைனான்ஸ் வங்கியானது, யுனிவர்சல் வங்கி உரிமம் கோரி, ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்தது.

ரிசர்வ் வங்கியானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உலகளாவிய வங்கிகளாக மாற குறைந்தபட்ச நிகர மதிப்பு ரூ.1,000 கோடி உள்ளிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் சிறு நிதி வங்கிகளிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றது.

இதையும் படிக்க: அண்டை நாடுகள் மீதான வரிகளை டிரம்ப் தாமதப்படுத்தியதால், மீண்ட பங்குச் சந்தைகள்!

ஈவுத்தொகையாக ரூ.35.3 கோடியை அறிவித்த தேசிய விதைகள் கழகம்!

புதுதில்லி: அரசுக்கு சொந்தமான தேசிய விதைகள் கார்ப்பரேஷன் லிமிடெட் 2023-24 நிதியாண்டிற்கான இறுதி ஈவுத்தொகையாக ரூ.35.30 கோடியை அறிவித்துள்ளது.வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான தேசிய வி... மேலும் பார்க்க

அண்டை நாடுகள் மீதான வரிகளை டிரம்ப் தாமதப்படுத்தியதால், மீண்ட பங்குச் சந்தைகள்!

மும்பை: மெக்ஸிகோ மற்றும் கனடா நாட்டின் மீதான கூடுதல் வரி விதிப்பு கட்டணங்களை ஒரு மாதத்திற்கு பிறகு அமல்படுத்தப்படுமென்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததையடுத்து, சென்செக்ஸ் 1.81 சதவிகிதமும்... மேலும் பார்க்க

பங்குச்சந்தை நிலவரம்! சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு!

நேற்று பங்குச்சந்தை சரிவடைந்த நிலையில் இன்று(பிப். 4) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,687.60 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 11.44 மணியளவி... மேலும் பார்க்க

சரிவிலிருந்து மீண்ட ரூபாயின் மதிப்பு..!

மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(பிப். 4) காலை 13 காசுகள் உயர்ந்துள்ளது. வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கள்கிழமை(பிப். 3) ரூபாயின் மதிப்பு 87.11 என்ற நிலையை எட்டியது... மேலும் பார்க்க

கரடியின் ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

மும்பை: கனடா, மெக்ஸிகோ மற்றும் சீனா மீதான அமெரிக்க அதிபர் விதித்த கட்டணங்களால் உலகளாவிய வர்த்தகப் போர் குறித்த அச்சங்களை மீண்டும் எழும்பியதால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிந்து முடிந்தது.முதலீ... மேலும் பார்க்க

வரலாறு காணாத வகையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87.29 ஆகக் குறைந்துள்ளது.டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் குறைந்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற ... மேலும் பார்க்க