செய்திகள் :

அண்டை நாடுகள் மீதான வரிகளை டிரம்ப் தாமதப்படுத்தியதால், மீண்ட பங்குச் சந்தைகள்!

post image

மும்பை: மெக்ஸிகோ மற்றும் கனடா நாட்டின் மீதான கூடுதல் வரி விதிப்பு கட்டணங்களை ஒரு மாதத்திற்கு பிறகு அமல்படுத்தப்படுமென்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததையடுத்து, சென்செக்ஸ் 1.81 சதவிகிதமும் மற்றும் நிஃப்டி இன்று கிட்டத்தட்ட 1.62 சதவிகிதம் உயர்ந்து முடிந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,471.85 புள்ளிகள் உயர்ந்து 78,658.59 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,397.07 புள்ளிகள் உயர்ந்து 78,583.81 புள்ளிகளிலும் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 378.20 புள்ளிகள் உயர்ந்து 23,739.25 புள்ளிகளாக நிலைபெற்றதையடுத்து சந்தை மூலதனம் இன்று ரூ.5.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

30 பங்குகள் கொண்ட ப்ளூ-சிப் பேக்கிலிருந்து இன்று லார்சன் & டூப்ரோ கிட்டத்தட்ட 5 சதவிகிதம் உயர்ந்தது. அதானி போர்ட்ஸ், இண்டஸ் இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வர்த்தகமானது. அதே வேளையில் ஐடிசி ஹோட்டல்கள், சொமேட்டோ, நெஸ்லே, மாருதி உள்ளிட்ட பங்குகள் சரிவை சந்தித்தது.

ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ மற்றும் ஹாங்காங் ஆகியவை கணிசமாக உயர்ந்தது. ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் சரிந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) சரிந்து முடிந்தது.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் இண்டஸ் இண்ட் வங்கி ஆகியவை நிஃப்டி 50-ல் இன்று 3 முதல் 6 சதவிகிதம் உயர்ந்தது. மறுபுறம் ட்ரெண்ட், பிரிட்டானியா, ஹீரோ மோட்டோகார்ப், நெஸ்லே மற்றும் டாடா கன்ஸ்யூமர் ஆகியவை 0.7 முதல் 6 சதவிகிதம் வரை சரிந்தது முடந்தது.

கோத்ரெஜ் பிராபர்டீஸ் 3 சதவிகிதத்திற்கு மேல் உயர்ந்த நிலையில், கிளாண்ட் பார்மாவின் பங்குகள் டிசம்பர் மாதம் ஏமாற்றமளிக்கும் காலாண்டைத் தொடர்ந்து பங்குகள் 5 சதவிகிதம் வரை சரிந்தது முடிந்தது.

சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏஜிஆர்) நிலுவைத் தொகை குறித்த முடிவை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக நிதி செயலாளர் பாண்டே தெரிவித்ததையடுத்து வோடபோன் ஐடியா பங்குகள் 3 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.

டிசம்பர் 31, 2024 உடன் முடிவடைந்த காலாண்டில் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 12 சதவிகிதம் அதிகரித்து ரூ.271 கோடியாக இருப்பதாக நிறுவனம் அறிவித்ததை அடுத்து கேஸ்ட்ரால் இந்தியாவின் பங்குகள் 6 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.

கஜாரியா செராமிக்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில், 25 சதவிகிதம் ஆண்டுக்கு ஆண்டு சரிந்தையடுத்து 2025 ஆம் நிதியாண்டின் 3-வது காலாண்டில் இது ரூ.77.7 கோடியாக சரிந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.104.2 கோடியாக இருந்தது.

இன்று 2,988 பங்குகள் வர்த்தகமான நிலையில் 1,951 பங்குகள் உயர்ந்தும் 863 பங்குகள் சரிந்தும் 85 பங்குகள் மாற்றமின்றி முடிந்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.05 சதவிகிதம் சரிந்து பீப்பாய்க்கு 75.16 டாலராக உள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.3,958.37 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

இதையும் படிக்க: பழைய நகைகளுக்கு புத்துயிா் அளிக்கும் ஜிஆா்டி

உலகளாவிய வங்கிக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்த உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி!

புதுதில்லி: உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி இன்று உலகளாவிய வங்கி உரிமத்திற்கான விண்ணப்பத்தை இந்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிப்பதாக அறிவித்துள்ளது.இந்த நடவடிக்கை வங்கியின் நீண்டகால பார்வையுடன் ஒத்துப்போகிறத... மேலும் பார்க்க

பங்குச்சந்தை நிலவரம்! சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு!

நேற்று பங்குச்சந்தை சரிவடைந்த நிலையில் இன்று(பிப். 4) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,687.60 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 11.44 மணியளவி... மேலும் பார்க்க

சரிவிலிருந்து மீண்ட ரூபாயின் மதிப்பு..!

மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(பிப். 4) காலை 13 காசுகள் உயர்ந்துள்ளது. வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கள்கிழமை(பிப். 3) ரூபாயின் மதிப்பு 87.11 என்ற நிலையை எட்டியது... மேலும் பார்க்க

கரடியின் ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

மும்பை: கனடா, மெக்ஸிகோ மற்றும் சீனா மீதான அமெரிக்க அதிபர் விதித்த கட்டணங்களால் உலகளாவிய வர்த்தகப் போர் குறித்த அச்சங்களை மீண்டும் எழும்பியதால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிந்து முடிந்தது.முதலீ... மேலும் பார்க்க

வரலாறு காணாத வகையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87.29 ஆகக் குறைந்துள்ளது.டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் குறைந்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற ... மேலும் பார்க்க

கடும் சரிவில் பங்குச்சந்தை! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!

வாரத்தின் முதல் நாளான இன்று(பிப். 3) பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,063.94 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 11.43 மணியளவில் சென்செக்ஸ் 5... மேலும் பார்க்க