செய்திகள் :

ஜகபர் அலி கொலை வழக்கு: குற்றவாளிகள் 5 பேரையும் 3 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க CBCID-க்கு அனுமதி!

post image

சட்டவிரோத கனிமக் கொள்ளைக்கு எதிராக புகார் கொடுத்த புதுக்கோட்டை மாவட்டம், வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி கடந்த ஜனவரி 17-ம் தேதி அன்று குவாரி உரிமையாளர்களால் சதி திட்டம் தீட்டப்பட்டு 407 மினி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை திருமயம் காவல் நிலைய போலீஸார் கொலை வழக்காக பதிவு செய்து இந்த வழக்கில் ஆர்.ஆர் குரூப்ஸ் குவாரி உரிமையாளர்களான ராசு, ராமையா, ராசுவின் மகன் தினேஷ்குமார், மினி லாரி உரிமையாளர் முருகானந்தம், லாரி ஓட்டுநர் காசிநாதன் ஆகிய ஐந்து பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஜகபர் அலி

இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்தச் சூழலில், வழக்கில் கைதாகி புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த குவாரி உரிமையாளர்கள் உட்பட ஐந்து பேரையும் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், நேற்று புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி காவல்துறையால் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், அவர்களை சி.பி.சி.ஐ.டி போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டிருந்தனர். இதனையடுத்து, மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ’காவலில் விசாரணை செய்யும் ஐந்து நபர்களையும் மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் காவலில் விசாரணை செய்ய அழைத்துச் செல்ல வேண்டும்.

ராமையா

அதேபோல், விசாரணை முடிந்த பிறகு மருத்துவ பரிசோதனை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். விசாரணைக்கு எடுக்கும் ஐந்து நபர்களையும் விசாரணையின் போது எந்தவித துன்புறுத்தலுக்கும் உட்படுத்தக் கூடாது’ உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு அனுமதி வழங்கி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவையடுத்து, சி.பி.சி.ஐ.டி போலீஸார் சம்பந்தப்பட்ட ஐந்து குற்றவாளிகளையும் காவல்துறை பாதுகாப்போடு அழைத்துச் சென்றனர். மேலும், மூன்று நாள் விசாரணை முடிந்து வருகின்ற 6-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் அந்த ஐந்து நபர்களையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் மறுபடியும் ஆஜர்படுத்த உள்ளனர். தற்பொழுது, காவலில் எடுத்துள்ள ஐந்து நபர்களையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் மூன்று நாட்கள் பல்வேறு கட்ட விசாரணையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

குவாரி

குறிப்பாக, தனித்தனியாக ஐந்து நபர்களிடம் விசாரிக்க உள்ளதாகவும், விசாரணை முடிவில் தான் இந்த வழக்கு அடுத்த கட்ட நகர்வுக்கு செல்வது தெரியவரும் என்றும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மருத்துவமனைக்குள் கத்தியுடன் நுழைந்த இளைஞர் - நூலிழையில் உயிர் தப்பிய செவிலியர்

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மருத்துவமனை வளாகத்திள் உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வருகிறார். அங்கு ஒரு இளைஞ... மேலும் பார்க்க

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்: இளைஞனை சுட்டுப்பிடித்த ராணிப்பேட்டை போலீஸ்!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிப்காட் காவல் நிலையத்தின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.நள்ளிரவு 12 மணியளவில், முகமூடி அணிந்து பைக்கில் வந்த அட... மேலும் பார்க்க

மும்பையை சுற்றிப்பார்க்க வந்த பெண்; இடமில்லாமல் ரயிலில் உறங்கிய போது பாலியல் வன்கொடுமை..

மும்பையில் தாதர், பாந்த்ரா, மும்பை சென்ட்ரல், குர்லா மற்றும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் போன்ற இடங்களில் ரயில்வே டெர்மினஸ் இருக்கிறது. இதில், பாந்த்ரா ரயில்வே டெர்மினஸில் நிறுத்தப்பட்டு இருந்த ரயிலில் உற... மேலும் பார்க்க

வேங்கை வயல் வழக்கில் CBCID குற்றப்பத்திரிகை ஏற்பு; வேறு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றம்..

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் முரண்பாடுகள் உள்ளதாகவும், அதனை ஏற்கக் கூடாது எனவும் புகார் தரரான கனகராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் ... மேலும் பார்க்க

``மிரட்டல், சித்ரவதையால் தளர்ந்துவிட்டேன்..'' -உறவின் போது காதலனை கழுத்தை நெரித்து கொலை செய்த பெண்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பரேலி என்ற இடத்தைச் சேர்ந்தவர் இக்பால்(32). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ரகசிய தொடர்பு இருந்தது. இந்நிலையில், இக்பால் அவரது வீட்டிற்கு அருகில் பிணமாக கிடந்தது ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: `முட்டைப் பொரியலில் விஷம் வச்சுட்டேன்' - காதலை கைவிட மறுத்த மகள்; தாய் செய்த கொடூரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) அதே பகுதியிலுள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார்.இவருக்கும் திருத்தணியைச் சேர்ந்... மேலும் பார்க்க