செய்திகள் :

காலநிலை மாற்ற கையேடு அரசால் வெளியிடப்படும்: முதல்வர்

post image

காலநிலை மாற்ற கையேடு அரசால் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் 2 நாள் நடைபெறும் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று(பிப். 4) தொடக்கிவைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளில் சூழலியல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். கால நிலை மாற்றத்தை கல்வி மூலம் புகட்ட அரசு திட்டமிட்டுள்ளது. காலநிலைக்கு என்று கொள்கை விரைவில் அறிவிக்கப்படும்.

இதையும் படிக்க: பாபா ராம்தேவுக்கு மீண்டும் பிடிவாரண்ட்!

மாணவர்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டுச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காலநிலை மாற்ற கையேடு அரசால் வெளியிடப்படும். வெப்ப அலையால் உயிரிழக்க நேரிட்டால் ரூ. 4 லட்சம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை பேரிடர்களை சமாளித்து மீண்டெக்கக்கூடிய சமூகமாக வளர வேண்டும். உலக நாடுகள் பல்வேறு இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்து வருகின்றன.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவை எதிர்கொள்ள மக்கள் அது குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். பொருளாதார மேம்பாடு, சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேளாண், நீர்வளத் துறைக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

பெற்றோர் வீட்டில் சங்கிலியால் கட்டி சிறை வைக்கப்பட்டிருந்த இளம்பெண் மீட்பு!

மகாராஷ்டிரத்தின் ஜால்னா மாவட்டத்தில் பெற்றோர் வீட்டில் 2 மாதங்களாக சங்கிலியால் கட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த பெண் காவல் துறையினரால் மீட்கப்பட்டார்.ஜால்னாவின் ஆலப்பூர் கிராமத்தில், ஷேனாஸ் (எ) சோனா... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் நீராடிய பூடான் அரசர்!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பூடான் அரசர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் புனித நீராடினார்.பூடான் நாட்டிலிருந்து லக்னெள விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை வருகை... மேலும் பார்க்க

ரூ.24 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்! ஜெர்மானியர் கைது!

கோவா மாநிலத்தின் வடக்கு கோவா மாவட்டத்தில் ரூ.24 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களை வைத்திருந்த ஜெர்மன் நாட்டு நபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.வடக்கு கோவாவில் கடந்த 2024 நவம்பர் ம... மேலும் பார்க்க

தந்தையின் இறுதி சடங்கில் மோதல்! சடலத்தை இரண்டாக பிரிக்கக் கோரிய மூத்த மகன்!

மத்தியப் பிரதேசத்தின் திகம்கார் மாவட்டத்தில் தந்தையின் இறுதி சடங்கில் ஏற்பட்ட மோதலில் அவரது உடலை மூத்த மகன் இரண்டாக பிரிக்கக் கோரிக்கை விடுத்தார்.திகம்காரின் லிதோராட்டால் கிராமத்தைச் சேர்ந்த தயானி சிங... மேலும் பார்க்க

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்: புதிய பாடல் அறிவிப்பு!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் புதிய பாடல் இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: நக்சல்களால் 2 இளைஞர்கள் படுகொலை!

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாநிலத்தில் நக்சல்களினால் 2 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.பிஜப்பூரின் புக்டிசேரு கிராமத்தில் கரம் ராஜு (வயது 32) மற்றும் மாதவி முன்னா (27) ஆகிய இரண்டு இளைஞர்கள் நேற்று (பிப்.... மேலும் பார்க்க