செய்திகள் :

தமிழகத்துக்கு வந்துவிட்ட ஜிபிஎஸ் நோய்! புனேவில் மாவட்டம் முழுவதும் பரவியது!

post image

கரோனா போல தமிழத்துக்கு வராது என்று கூறிக் கொண்டிருந்த ஜிபிஎஸ் நோய் பாதித்து திருவள்ளூரைச் சேர்ந்த சிறுவன் மரணமடைந்திருக்கும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனேவில், மாவட்டம் முழுவதும் அந்நோய் பரவியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன், ‘கில்லன் பாரே சின்ட்ரோம்’ என்ற ஜிபிஎஸ் நோய் பாதிப்புக்குள்ளாகி, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மகாராஷ்டிரம், மேற்கு வங்கத்தை தொடா்ந்து ஜிபிஎஸ் நோய் தொற்று தமிழகத்துக்கும் பரவியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நோய் பாதித்து, சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து திருவள்ளூா் அருகே திருவூரில் மருத்துவக் குழுவினா் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், உலகிலேயே அதிக ஜிபிஎஸ் நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட இடமாக இருக்கும் மகாராஷ்டிர மாநிலம் புனேவில், சின்ஹகத் சாலையில்தான் அதிக நோய் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அந்தப் பகுதியைத் தாண்டி, முந்த்வா, கேத், மாவல், சிகாலி என மாவட்டம் முழுவதும் நோய் பாதிப்பு பரவியிருப்பது சுகாதாரத் துறையினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது மாவட்டம் முழுவதுமிருந்து புதிது புதிதாக நோய் பாதித்து மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில், ஜிபிஎஸ் பாதித்த 158 பேரில் 127 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மரணமடைந்த 5 பேருக்கு இந்த தொற்று இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. தற்போது புனேவிலிருந்து 31 நோயாளிகளும், இதர கிராமங்களிலிருந்து 83 பேரும், ஊரகப் பகுதியிலிருந்து 18 பேரும், இதர மாவட்டங்களிலிருந்து 8 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதலில் ஒரே ஒரு பகுதியில்தான் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இது தற்போது மாவட்டம் முழுவதும் பரவியிருப்பதால், குழந்தைகளின் நிலை குறித்து கவலை ஏற்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இது பல ஆண்டுகாலமாக மக்களை தாக்கிவருவதாகவும், இப்போது இது பற்றிய அச்சம் அதிகரித்திருப்பதகாவும், சுகாதாரத் துறையினர் கூறுகிறார்கள். பொதுவாக இந்நோய் பாதிப்பினால் மரணம் நேரிடாது என்றாலும், ஏதேனும் இணை நோய்கள் இருந்து, இந்நோய் தாக்கும்போதுதான் சிகிச்சைபலனளிக்காமல் போவதாகவும் மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

பொதுவாக இந்த நோய் குடிநீர் மூலமாகப் பரவுவதாகக் கூறினாலும், புதிதாகக் கண்டறிந்த நோயாளிகளுக்கு குடிநீர் மூலமாகப் பரவியிருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றே கருதப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொதிக்க வைத்த குடிநீர் மற்றும் சமைத்த உணவை மட்டும் சாப்பிடும்படி பொதுமக்களை சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தேர்தல் ஆணையருக்கு ஆளுநர் பதவியா? விமர்சனங்களுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

புது தில்லி : தில்லி சட்டப்பேரவைக்கு பிப்.5-ஆம் தேதி நடைபெறும் தோ்தலுக்கான பிரசாரத்தின் இறுதி நாளான திங்கள்கிழமை(பிப். 3) பேசிய தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த்... மேலும் பார்க்க

கும்பமேளா: பிரதமர் மோடி நாளை புனித நீராடல்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை(பிப். 5) புனித நீராடவுள்ளார்.இதனால், பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமம் பகுதியில் பாதுகாப்பு ... மேலும் பார்க்க

பொது சிவில் சட்டம்: 5 பேர் குழு அமைத்தது குஜராத் அரசு!

பொது சிவில் சட்டத்துக்கான வரைவை தயாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார்.நாட்டில் முதல் மாநிலமாக உத்தரகண்டில் பொத... மேலும் பார்க்க

'உப்புமா வேண்டாம்; பிரியாணி, சிக்கன் வேண்டும்' - அங்கன்வாடியில் சிறுவனின் கோரிக்கைக்கு அமைச்சர் பதில்!

கேரளத்தில் அங்கன்வாடியில் படிக்கும் சிறுவன், தனக்கு உப்புமாவுக்குப் பதிலாக பிரியாணி வேண்டும் எனக் கேட்டதற்கு கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் பதிலளித்துள்ளார். கேரளத்தில் அங்கன்வாடியில் படிக்கும் ஷங்கு என்ற ... மேலும் பார்க்க

முகூர்த்த நேரத்துக்காகக் காத்திருக்கிறீர்களா? உச்ச நீதிமன்றம் கேள்வி

புது தில்லி: வெளிநாட்டினரை தடுப்பு மையங்களில் வைத்திருக்கும் வழக்கில், முகூர்த்த நேரத்துக்காகக் காத்திருக்கிறீர்களா என்று உச்ச நீதிமன்றம் அசாம் மாநில அரசிடம் கேள்வி எழுப்பியிருக்கிறது.வெளிநாட்டினராக அ... மேலும் பார்க்க

கும்பமேளா கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் எத்தனை பேர்? - மக்களவையில் அகிலேஷ் கேள்வி!

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என மக்களவையில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ... மேலும் பார்க்க