செய்திகள் :

'உப்புமா வேண்டாம்; பிரியாணி, சிக்கன் வேண்டும்' - அங்கன்வாடியில் சிறுவனின் கோரிக்கைக்கு அமைச்சர் பதில்!

post image

கேரளத்தில் அங்கன்வாடியில் படிக்கும் சிறுவன், தனக்கு உப்புமாவுக்குப் பதிலாக பிரியாணி வேண்டும் எனக் கேட்டதற்கு கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் பதிலளித்துள்ளார்.

கேரளத்தில் அங்கன்வாடியில் படிக்கும் ஷங்கு என்ற சிறுவன், 'எனக்கு உப்புமாவுக்குப் பதிலாக பிரியாணியும் பொரித்த கோழியும் வேண்டும், அங்கன்வாடியின் உணவுப் பட்டியல் மாற்றப்பட வேண்டும்' என தன் தாயிடம் கேட்ட விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த விடியோவைப் பார்த்த கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்,

'குழந்தையின் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அங்கன்வாடியின் உணவுப் பட்டியல் மதிப்பாய்வு செய்யப்படும்' என்று கூறிய அமைச்சர் சிறுவனின் தாய் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அமைச்சர் வீணா ஜார்ஜ், குழந்தை கோரிக்கை வைக்கும் வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

இந்த விடியோவுக்குப் பின்னர் சிறுவன் ஷங்குவிற்கு பலரும் பிரியாணியும் சிக்கனும் வாங்கித்டீ தருவதாக சிறுவனின் தாய் கூறியுள்ளார்.

முதல் முறை.. குடியரசுத் தலைவர் மாளிகையில் சிஆர்பிஎஃப் வீராங்கனைக்கு திருமணம்!

புது தில்லியில் அமைந்துள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், சிஆர்பிஎஃப் வீராங்கனை பூனம் குப்தாவுக்கு திருமண வைபவம் நடைபெறவிருக்கிறது. இங்கு தனிநபரின் நிகழ்ச்சி ஒன்று நடைபெறுவது இதுவே முதல் முறை என தகவல்க... மேலும் பார்க்க

இந்திய- சீன எல்லை குறித்து ராகுல் கூறியது தவறு: ராஜ்நாத் சிங்

இந்திய- சீன எல்லை விவகாரம் குறித்து ராகுல் காந்தி தவறான குற்றச்சாட்டுகளை கூறியதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் நேற்று(பிப். 3) பேசிய எதிர்க்கட்ச... மேலும் பார்க்க

ம.பி.யில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மத்தியப் பிரதேசத்தில் தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் கந்த்வா சாலை மற்றும் ராவ் பகுதிகளில் உள்ள 2 தனியா... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையருக்கு ஆளுநர் பதவியா? விமர்சனங்களுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

புது தில்லி : தில்லி சட்டப்பேரவைக்கு பிப்.5-ஆம் தேதி நடைபெறும் தோ்தலுக்கான பிரசாரத்தின் இறுதி நாளான திங்கள்கிழமை(பிப். 3) பேசிய தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த்... மேலும் பார்க்க

கும்பமேளா: பிரதமர் மோடி நாளை புனித நீராடல்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை(பிப். 5) புனித நீராடவுள்ளார்.இதனால், பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமம் பகுதியில் பாதுகாப்பு ... மேலும் பார்க்க

பொது சிவில் சட்டம்: 5 பேர் குழு அமைத்தது குஜராத் அரசு!

பொது சிவில் சட்டத்துக்கான வரைவை தயாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார்.நாட்டில் முதல் மாநிலமாக உத்தரகண்டில் பொத... மேலும் பார்க்க