செய்திகள் :

ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1,000 கோடி சொத்துகள், ரூ.912 கோடி பணம் முடக்கம்!

post image

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையின் போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1,000 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.912 கோடி பணம் முடக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், சென்னையில் தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையின்போது பல்வேறு ஆவணங்களும், டிஜிட்டல் முறையில் இருந்த தகவல்களும் திரட்டப்பட்டன.

அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி, அதன் தொடர்ச்சியாக தொழிலதிபரின் சுமார் 1000 கோடி ரூபாய் சொத்துகளின் ஆவணங்களை பறிமுதல் செய்து அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், ஆண்டாள் ஆறுமுகம் பெயரில், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்பட்ட ரூ.912 கோடி பணத்தையும் முடக்கி உள்ளதாக அமலாக்கத் துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம், சென்னையில், ஆண்டாள் ஆறுமுகத்துக்குத் தொடர்புடைய மூன்று இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆண்டாள் ஆறுமுகத்துக்குச் சொந்தமான ஆர்கேஎம் பவர்ஜென் தனியார் நிறுவனத்தின் மீது பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 விதிகளின் கீழ் நடந்து வரும் வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எஃப்ஐஆர் கசிந்த விவகாரம்: பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது - நீதிமன்றம்

சென்னையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தொடர்பான முதல் தகவல் அறிக்கை கசிந்த விவகாரத்தில், பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம... மேலும் பார்க்க

அரசு-ஆளுநர் மோதலால் மக்களுக்கு பாதிப்பு; மசோதாக்களை திருப்பி அனுப்பியிருக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: மாநில ஆளுநர் - தமிழக அரசு இடையிலான மோதல் போக்கால் மக்களுக்கே பாதிப்பு என்றும், மசோதாக்களை திருப்பி அனுப்பியிருக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தமிழக அரசுக்கும், ஆளுநர்... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த 2 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை : தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறபட்டுள்ளதாவது: தமிழகம... மேலும் பார்க்க

பிப். 16, 25ல் ஜாக்டோ-ஜியோ போராட்டம் அறிவிப்பு!

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற பிப். 16, 25 ஆகிய தேதிகளில் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ-ஜியோ கூறியுள்ளது. அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ... மேலும் பார்க்க

எச். ராஜாவுக்கு வீட்டுக் காவல்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராட்டத்துக்கு புறப்பட்ட பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை காவல்துறையினர் வீட்டுக் காவலில் அடைத்து வைத்துள்ளனர்.அதேபோல், பாஜக மாநிலச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசனையும் மதுரையில்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: உச்சகட்ட பரபரப்பு

திருப்பரங்குன்றம் மலைக்கு இன்று பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என்று காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடு... மேலும் பார்க்க