செய்திகள் :

தந்தையின் இறுதி சடங்கில் மோதல்! சடலத்தை இரண்டாக பிரிக்கக் கோரிய மூத்த மகன்!

post image

மத்தியப் பிரதேசத்தின் திகம்கார் மாவட்டத்தில் தந்தையின் இறுதி சடங்கில் ஏற்பட்ட மோதலில் அவரது உடலை மூத்த மகன் இரண்டாக பிரிக்கக் கோரிக்கை விடுத்தார்.

திகம்காரின் லிதோராட்டால் கிராமத்தைச் சேர்ந்த தயானி சிங் கோஷ் (வயது 84), நீண்ட நாள்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு அவரது இளைய மகனான தாமோதர் சிங் என்பவருடன் வசித்து வந்த நிலையில், கடந்த பிப்.2 அன்று காலமானார்.

இந்நிலையில், அவரது இறுதி சடங்கு செய்வது குறித்து தாமோதருக்கும் அவரது மூத்த சகோதரரான கிஷன் சிங் என்பவருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. மூத்த மகனான கிஷன் தனக்கு தான் இறுதி சடங்கு செய்யும் உரிமை உள்ளது என்று கூறியுள்ளார்.

ஆனால், தயானி சிங் தனது இளைய மகனான தாமோதரர் தான் தனக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டும் என ஆசைப்பட்டதாக தாமோதரன் கூறியுள்ளார். இதனால், சகோதரர்கள் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தேர்தல் விதிமீறல்: தில்லி முதல்வர் மீது வழக்குப்பதிவு!

இந்த வாக்குவாதம் தொடர்ந்தபோது குடிபோதையில் இருந்த கிஷன் தங்களது தந்தையின் உடலை இரண்டாக வெட்டி இருவரும் தனித்தனியாக இறுதி சடங்கு செய்துக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். இந்த கோரிக்கையால், அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல் துறையினர் இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின்னர், அவரது ஊர் மக்கள் மற்றும் உறவினர்களுடன் விசாரணை நடத்திய போலீஸார் தயானி சிங்கின் இறுதி காலத்தில் அவரை கவனித்துக்கொண்ட அவரது இளைய மகானான தாமோதரருக்கு இறுதி சடங்கு செய்யும் உரிமையை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, அவரது தந்தையின் இறுதி சடங்குகளை தாமோதரர் மேற்கொள்ள, அதற்கு ஒத்துழைக்குமாறு கிஷனுக்கு அறிவுறுத்தப்பட்டது. குடிபோதையில் இருந்த மூத்த மகனின் இந்த செயலினால் அவர்களது கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாகிஸ்தானில் பதுங்கு குழிகள் வெடி வைத்து தகர்ப்பு!

பாகிஸ்தானின் குர்ராம் மாவட்டத்தில் மோதல்காரர்களின் 30க்கும் மேற்பட்ட பதுங்கு குழிகள் அதிகாரிகளால் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.வடமேற்கு பாகிஸ்தானின் குர்ராம் மாவட்டத்தில் தொடர் மோதல்களிலும் தாக்குதல்கள... மேலும் பார்க்க

மெட்ரோ பணிகள்: மாதவரம் எம்.எம். காலனியை காலி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக மாதவரம் எம்.எம். காலனியை காலி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்காக மாதவரம் பால் பண்ணை அருகே உள்ள எம்.எம். காலனியை 4 மாதங... மேலும் பார்க்க

சங்கத்தமிழ் நாள்காட்டியினை வெளியிட்ட முதல்வர்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப். 4) தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் ... மேலும் பார்க்க

பெற்றோர் வீட்டில் சங்கிலியால் கட்டி சிறை வைக்கப்பட்டிருந்த இளம்பெண் மீட்பு!

மகாராஷ்டிரத்தின் ஜால்னா மாவட்டத்தில் பெற்றோர் வீட்டில் 2 மாதங்களாக சங்கிலியால் கட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த பெண் காவல் துறையினரால் மீட்கப்பட்டார்.ஜால்னாவின் ஆலப்பூர் கிராமத்தில், ஷேனாஸ் (எ) சோனா... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் நீராடிய பூடான் அரசர்!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பூடான் அரசர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் புனித நீராடினார்.பூடான் நாட்டிலிருந்து லக்னெள விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை வருகை... மேலும் பார்க்க

ரூ.24 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்! ஜெர்மானியர் கைது!

கோவா மாநிலத்தின் வடக்கு கோவா மாவட்டத்தில் ரூ.24 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களை வைத்திருந்த ஜெர்மன் நாட்டு நபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.வடக்கு கோவாவில் கடந்த 2024 நவம்பர் ம... மேலும் பார்க்க