செய்திகள் :

மகா கும்பமேளாவில் நீராடிய பூடான் அரசர்!

post image

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பூடான் அரசர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் புனித நீராடினார்.

பூடான் நாட்டிலிருந்து லக்னெள விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை வருகை தந்த பூடான் அரசர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக்கை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மலர் கொத்து வழங்கி வரவேற்றார். பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் பூடான் அரசருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, பூடான் அரசா் ஜிக்மே கேசா் நம்கியால் வாங்சுக், உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் மகா கும்பமேளாவில் புனித நீராடுவதற்காக இன்று லக்னெள விமான நிலையத்தில் இருந்து பிரயாக்ராஜுக்கு விமானம் மூலம் புறப்பட்டார்.

இந்த நிலையில், பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் பூடான் அரசர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் புனித நீராடியதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பான விடியோக்கள், புகைப்படங்களையும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பகிர்ந்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனர்.

இதையும் படிக்க: பொது சிவில் சட்டம்: 5 பேர் குழு அமைத்தது குஜராத் அரசு!

வசந்த பஞ்சமி நாளான நேற்று(பிப். 3) ஒரே நாளில் 2.33 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடினர்.

மாகி பௌா்ணமி (பிப். 12), மகா சிவராத்திரி (பிப். 26) ஆகிய மேலும் 2 சிறப்பு நாள்கள் அடுத்தடுத்து வரவுள்ளன. 45 நாள்களுக்கு நடைபெறும் மகா கும்பமேளா மகா சிவராத்திரியுடன் முடிவடைள்ளது.

இதில் 50 கோடிக்கும் மேற்பட்டவர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானில் பதுங்கு குழிகள் வெடி வைத்து தகர்ப்பு!

பாகிஸ்தானின் குர்ராம் மாவட்டத்தில் மோதல்காரர்களின் 30க்கும் மேற்பட்ட பதுங்கு குழிகள் அதிகாரிகளால் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.வடமேற்கு பாகிஸ்தானின் குர்ராம் மாவட்டத்தில் தொடர் மோதல்களிலும் தாக்குதல்கள... மேலும் பார்க்க

மெட்ரோ பணிகள்: மாதவரம் எம்.எம். காலனியை காலி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக மாதவரம் எம்.எம். காலனியை காலி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்காக மாதவரம் பால் பண்ணை அருகே உள்ள எம்.எம். காலனியை 4 மாதங... மேலும் பார்க்க

சங்கத்தமிழ் நாள்காட்டியினை வெளியிட்ட முதல்வர்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப். 4) தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் ... மேலும் பார்க்க

பெற்றோர் வீட்டில் சங்கிலியால் கட்டி சிறை வைக்கப்பட்டிருந்த இளம்பெண் மீட்பு!

மகாராஷ்டிரத்தின் ஜால்னா மாவட்டத்தில் பெற்றோர் வீட்டில் 2 மாதங்களாக சங்கிலியால் கட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த பெண் காவல் துறையினரால் மீட்கப்பட்டார்.ஜால்னாவின் ஆலப்பூர் கிராமத்தில், ஷேனாஸ் (எ) சோனா... மேலும் பார்க்க

ரூ.24 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்! ஜெர்மானியர் கைது!

கோவா மாநிலத்தின் வடக்கு கோவா மாவட்டத்தில் ரூ.24 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களை வைத்திருந்த ஜெர்மன் நாட்டு நபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.வடக்கு கோவாவில் கடந்த 2024 நவம்பர் ம... மேலும் பார்க்க

தந்தையின் இறுதி சடங்கில் மோதல்! சடலத்தை இரண்டாக பிரிக்கக் கோரிய மூத்த மகன்!

மத்தியப் பிரதேசத்தின் திகம்கார் மாவட்டத்தில் தந்தையின் இறுதி சடங்கில் ஏற்பட்ட மோதலில் அவரது உடலை மூத்த மகன் இரண்டாக பிரிக்கக் கோரிக்கை விடுத்தார்.திகம்காரின் லிதோராட்டால் கிராமத்தைச் சேர்ந்த தயானி சிங... மேலும் பார்க்க