நேரடியாக ஓடிடியில் வெளியாகும் மாதவன் - சித்தார்த்தின் டெஸ்ட்!
கோவை மருத்துவமனைக்குள் கத்தியுடன் நுழைந்த இளைஞர் - நூலிழையில் உயிர் தப்பிய செவிலியர்
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மருத்துவமனை வளாகத்திள் உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வருகிறார். அங்கு ஒரு இளைஞர் நேற்று அத்துமீறி நுழைந்துள்ளார்.
அவரை அங்கிருந்த விடுதிக் காப்பாளர் தடுத்துள்ளார். அவரை கடுமையான வார்த்தைகளில் திட்டிவிட்டு உள்ளே சென்றுள்ளார். தொடர்ந்து அவர் மல்லிகாவின் கழுத்தை நெரித்து கத்தியால் தாக்க முயற்சித்துள்ளார்.
அப்போது மல்லிகா தப்பிப்பதற்காக கைகளால் தடுத்துள்ளார். இதனால் கை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து விடுதிக் காப்பாளர்கள் மற்றும் மருத்துவமனை பாதுகாவலர்கள் அங்கு உடனடியாக விரைந்து இளைஞரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை விசாரணையில் அவர் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த சுஜித் என்பது தெரியவந்துள்ளது.
விடுதிக் காப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் சுஜித்தும், மல்லிகாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மல்லிகா சுஜித்திடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். காயமடைந்த மல்லிகாவுக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs