செய்திகள் :

வட தமிழகத்தில் நாளையும் அடர் பனிமூட்டம் நிலவும்!

post image

வட தமிழக மாவட்டங்களில் நாளையும் அடர் பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு வட மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பனியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. காலை நேரத்தில் எதிரே இருப்பதுகூட தெரியாத அளவுக்கு பனிப் பொழிவு இருக்கிறது.

சென்னையில் நிலவும் அடர்ந்த பனிமூட்டத்தால், விமானங்கள், ரயில்கள் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

சென்னை விமான நிலையத்தில் 25-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இன்று பாதிக்கப்பட்டன. தில்லி, மும்பை செல்லும் செல்லும் 5 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டது. சில விமானங்கள் தரையிரங்க முடியாமல் திருப்பிவிடப்பட்டன.

அதேபோல், ரயில்களும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டதால் ரயில் சேவையிலும் சிறிது தாமதம் ஏற்பட்டது. மேலும், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் முன் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்திருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.

இதையும் படிக்க : சென்னையில் பனிமூட்டம்: விமானம், மின்சார ரயில் சேவை பாதிப்பு!

இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் வெளியிட்ட பதிவில், வட தமிழகத்தில் அடர்ந்த மூடுபனி இன்று காணப்பட்டது. நாளை காலையிலும் இதே போன்ற காட்சிகள் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

பிப். 16, 25ல் ஜாக்டோ-ஜியோ போராட்டம் அறிவிப்பு!

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற பிப். 16, 25 ஆகிய தேதிகளில் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ-ஜியோ கூறியுள்ளது. அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ... மேலும் பார்க்க

எச். ராஜாவுக்கு வீட்டுக் காவல்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராட்டத்துக்கு புறப்பட்ட பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை காவல்துறையினர் வீட்டுக் காவலில் அடைத்து வைத்துள்ளனர்.அதேபோல், பாஜக மாநிலச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசனையும் மதுரையில்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: உச்சகட்ட பரபரப்பு

திருப்பரங்குன்றம் மலைக்கு இன்று பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என்று காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடு... மேலும் பார்க்க

சுவாமி மலையில் காவல்துறை - இந்து அமைப்பினர் இடையே தள்ளுமுள்ளு

கும்பகோணம் அருகே இந்து அமைப்பினர் சார்பில் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக சுவாமிமலைக்கு வேலுடன் சுவாமி தரிசனம் செய்ய வந்த பாஜகவினரை தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பரபரப்பு நிலவியது.கும்பகோணம... மேலும் பார்க்க

மற்றொரு பாபர் மசூதி பிரச்னை உருவாகிவிடக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் அரசு பதில்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மற்றொரு பாபர் மசூதி பிரச்னை உருவாகிவிடக் கூடாது என்பதற்காக போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தமிழக அரசு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பதிலளித்துள்ளது.திருப்பரங்குன்... மேலும் பார்க்க

சென்னை விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: தீவிர சோதனை!

சென்னை : சென்னை விமான நிலையத்திற்கு 237 பயணிகளுடன் இன்று (பிப். 4) அதிகாலை வந்து கொண்டிருந்த சர்வதேச விமானம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதும... மேலும் பார்க்க