செய்திகள் :

பாபா ராம்தேவுக்கு மீண்டும் பிடிவாரண்ட்!

post image

போலி விளம்பரங்கள் வெளியிட்ட வழக்கில் பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மற்றும் இணை நிறுவனர் பாபா ராம்தேவுக்கு எதிராக பிணையில் வரமுடியாத பிடிவாரண்ட்டை கேரள நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

பாலக்காடு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் இருவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டும் தொடர்ந்து ஆஜராகாததால், பிணையில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து திங்கள்கிழமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க : ராணுவ விமானத்தில் இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!

பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் துணை நிறுவனமான திவ்யா பார்மசி வெளியிட்ட விளம்பரங்கள், மருந்துகள் மற்றும் மந்திர வைத்தியம்(ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள்) சட்டம் 1954 இன் விதிகளை மீறியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அலோபதி உள்ளிட்ட நவீன மருத்துவத்தை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வெளியிட்டதாகவும், நோய்களைக் குணப்படுத்துவதாக ஆதாரமற்ற கூற்றுக்களை வெளியிட்டதாகவும் கேரளம் முழுவதும் பல குற்றவியல் வழக்குகள் திவ்யா பார்மசி மீது தொடரப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பாலக்காடு மருத்துவத் துறை ஆய்வாளர் கடந்த ஆண்டு தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக பாபா ராம்தேவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

கடந்த ஜனவரி 16 ஆம் தேதி ஆஜராக விடுத்த சம்மனுக்கு அவர் நேரில் ஆஜராகாததால், பிணையில் வரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

ஆனால், மீண்டும் பாபா ராம்தேவ் ஆஜராகததால், பிணையில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து பாலக்காடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அடுத்த விசாரணையை பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு

ஏற்கெனவே, போலி விளம்பரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா மன்னிப்பு கோரினர்.

பதஞ்சலியின் போலி விளம்பரத்துக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், போலி விளம்பரம் தொடர்பாக செய்தித் தாள்களிலும் மன்னிப்பு கோரும் அறிவிப்பை வெளியிட உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைத்தது குறிப்பிடத்தக்கது.

கும்பமேளா: பிரதமர் மோடி நாளை புனித நீராடல்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை(பிப். 5) புனித நீராடவுள்ளார்.இதனால், பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமம் பகுதியில் பாதுகாப்பு ... மேலும் பார்க்க

பொது சிவில் சட்டம்: 5 பேர் குழு அமைத்தது குஜராத் அரசு!

பொது சிவில் சட்டத்துக்கான வரைவை தயாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார்.நாட்டில் முதல் மாநிலமாக உத்தரகண்டில் பொத... மேலும் பார்க்க

'உப்புமா வேண்டாம்; பிரியாணி, சிக்கன் வேண்டும்' - அங்கன்வாடியில் சிறுவனின் கோரிக்கைக்கு அமைச்சர் பதில்!

கேரளத்தில் அங்கன்வாடியில் படிக்கும் சிறுவன், தனக்கு உப்புமாவுக்குப் பதிலாக பிரியாணி வேண்டும் எனக் கேட்டதற்கு கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் பதிலளித்துள்ளார். கேரளத்தில் அங்கன்வாடியில் படிக்கும் ஷங்கு என்ற ... மேலும் பார்க்க

முகூர்த்த நேரத்துக்காகக் காத்திருக்கிறீர்களா? உச்ச நீதிமன்றம் கேள்வி

புது தில்லி: வெளிநாட்டினரை தடுப்பு மையங்களில் வைத்திருக்கும் வழக்கில், முகூர்த்த நேரத்துக்காகக் காத்திருக்கிறீர்களா என்று உச்ச நீதிமன்றம் அசாம் மாநில அரசிடம் கேள்வி எழுப்பியிருக்கிறது.வெளிநாட்டினராக அ... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு வந்துவிட்ட ஜிபிஎஸ் நோய்! புனேவில் மாவட்டம் முழுவதும் பரவியது!

கரோனா போல தமிழத்துக்கு வராது என்று கூறிக் கொண்டிருந்த ஜிபிஎஸ் நோய் பாதித்து திருவள்ளூரைச் சேர்ந்த சிறுவன் மரணமடைந்திருக்கும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனேவில், மாவட்டம் முழுவதும் அந்நோய் பரவியிருப... மேலும் பார்க்க

கும்பமேளா கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் எத்தனை பேர்? - மக்களவையில் அகிலேஷ் கேள்வி!

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என மக்களவையில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ... மேலும் பார்க்க