செய்திகள் :

ஈரோடு கிழக்கில் பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

post image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.41% வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்ரவரி 5) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையடுத்து இத்தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 26.03% வாக்குகள் பதிவான நிலையில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி, 42.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | தில்லி தேர்தல்: சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி வாக்களித்தனர்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

திமுக சாா்பில் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி. சீதாலட்சுமி என இருமுனைப் போட்டி நிலவும் ஈரோடு கிழக்குதொகுதியில் 31 சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 46 போ் களத்தில் உள்ளனா்.

திமுக ஆட்சி அமைந்து மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இடைத்தோ்தல் என்பதும், பிரதான எதிா்க்கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும்கட்சியான பாஜக ஆகிய பிரதான கட்சிகள் தோ்தலில் போட்டியிடாத நிலையிலும், மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தை பெறவேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளா்கள் உள்ளனா். அவர்களுக்கு வசதியாக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ஒன்பது வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிற்பகல் 3 மணி: ஈரோடு கிழக்கு வாக்குப்பதிவு நிலவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 53.63% வாக்குகள் பதிவாகியுள்ளன.ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்ரவரி 5) காலை 7 மணிக்கு த... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்!

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:05-02-2025: தமி... மேலும் பார்க்க

இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ?: அண்ணாமலை கேள்வி

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த பெண்ணுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையால் அந்த பெண்ணின் கூச்சல் கேட்டு நல்லவர் ஒருவர் காவல்துறையை அழைத்ததால், அந்த பெண் தப்பிய நிலையில், நம் சகோதரிகளுக்கு பாதுகாப்... மேலும் பார்க்க

டாஸ்மாக்கில் கள்ளச்சாரயம்... திமுக வெட்கப்பட வேண்டும்: இபிஎஸ்

கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப் படுத்தியுள்ளதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது பற்றி கள்ளச்சாராய விற்பனை தன்னுடைய எக்ஸ் தளப் ப... மேலும் பார்க்க

கும்பமேளா மரணங்களை பாஜக மறைத்துவிட்டது: திமுக குற்றச்சாட்டு

கும்பமேளா கூட்ட நெரிசலில் 48 பேர் இறந்துள்ள நிலையில், மரணங்களைக் கூட மறைத்து தவறான கணக்கைக் காட்டியுள்ளதாக பாஜகவை திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'முரசொலி' கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. உத்தரப்... மேலும் பார்க்க

மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு திருப்பரங்குன்றத்தில் கூடுவோம்: செல்வப்பெருந்தகை

மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு திருப்பரங்குன்றத்தில் நாளை(பிப். 6) அணிதிரள்வோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பரங்குன்றம் கோயில... மேலும் பார்க்க