செய்திகள் :

இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ?: அண்ணாமலை கேள்வி

post image

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த பெண்ணுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையால் அந்த பெண்ணின் கூச்சல் கேட்டு நல்லவர் ஒருவர் காவல்துறையை அழைத்ததால், அந்த பெண் தப்பிய நிலையில், நம் சகோதரிகளுக்கு பாதுகாப்பான சூழலை அதிகாரிகள் உறுதி செய்வதற்கு முன்பு இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ..? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டிருப்பதாவது:

கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு வெளியே 18 வயது இளம்பெண் ஒரு ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

உதவி கேட்டு சத்தமிட்ட அந்த இளம்பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்த அந்த ஒரு நல்ல மனிதரால் அந்த பெண் காப்பற்றப்பட்டார்.

தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை என்பது சாதாரணமாகிவிட்டது. போதைப் பொருள் எளிதில் கிடைக்கூடிய பொருளாக மாறிவிட்டது.

கும்பமேளா மரணங்களை பாஜக மறைத்துவிட்டது: திமுக குற்றச்சாட்டு

இருப்பினும், தமிழ்நாட்டில் போதைப் பொருள் தடுப்பு வழக்கில் கடந்த 2021 இல் மட்டும் 9,632 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில், 2022 மற்றும் 2024-க்கு இடையில், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1122 மட்டுமே.

தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் மெத்தம்பேட்டமைன் போன்ற போதைப் பொருள்கள் விற்பனை அதிகரித்து வருகிறது, ஆனால் கைதுகள் மட்டும் குறைந்து வருவது எப்படி?

குறைவான அளவில் போதைப் பொருள் தொடர்பான கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் சுதந்திரமாக திரிவதற்காகவே தமிழக அரசு வேண்டுமென்றே மெத்தனமாகிவிட்டதா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் போதைப் பொருள்கள் விற்பனை அதிகரித்துள்ளதால் தான் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நம் சகோதரிகளுக்கு பாதுகாப்பான சூழலை அதிகாரிகள் உறுதி செய்வதற்கு முன்பு இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ??? என அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 10 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்! - அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் அளவு 10 லட்சம் மெட்ரிக் டன்னைத் தாண்டியதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற... மேலும் பார்க்க

நீ நான் காதல் தொடரிலிருந்து விலகிய பிரபலம்!

நீ நான் காதல் தொடரில் இருந்து நடிகை தனுஷிக் விலகியுள்ளார்.ஸ்டார் மா தொலைக்காட்சியின் பிரபல தொடரான 'நுவ்வு நேனு பிரேமா' என்ற தொடரின் மறு உருவாக்கமாக 'நீ நான் காதல்' தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.விஜய் த... மேலும் பார்க்க

பிற்பகல் 3 மணி: ஈரோடு கிழக்கு வாக்குப்பதிவு நிலவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 53.63% வாக்குகள் பதிவாகியுள்ளன.ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்ரவரி 5) காலை 7 மணிக்கு த... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்!

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:05-02-2025: தமி... மேலும் பார்க்க

டாஸ்மாக்கில் கள்ளச்சாரயம்... திமுக வெட்கப்பட வேண்டும்: இபிஎஸ்

கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப் படுத்தியுள்ளதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது பற்றி கள்ளச்சாராய விற்பனை தன்னுடைய எக்ஸ் தளப் ப... மேலும் பார்க்க

கும்பமேளா மரணங்களை பாஜக மறைத்துவிட்டது: திமுக குற்றச்சாட்டு

கும்பமேளா கூட்ட நெரிசலில் 48 பேர் இறந்துள்ள நிலையில், மரணங்களைக் கூட மறைத்து தவறான கணக்கைக் காட்டியுள்ளதாக பாஜகவை திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'முரசொலி' கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. உத்தரப்... மேலும் பார்க்க