செய்திகள் :

நீ நான் காதல் தொடரிலிருந்து விலகிய பிரபலம்!

post image

நீ நான் காதல் தொடரில் இருந்து நடிகை தனுஷிக் விலகியுள்ளார்.

ஸ்டார் மா தொலைக்காட்சியின் பிரபல தொடரான 'நுவ்வு நேனு பிரேமா' என்ற தொடரின் மறு உருவாக்கமாக 'நீ நான் காதல்' தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2013 நவ 13 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் இத்தொடரின் பிரதான பாத்திரத்தில் பிரேம் ஜேக்கப், வர்ஷினி சுரேஷ், சங்கரேஷ் குமார், நவீன் முரளிதரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு 350 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில், அஞ்சலி பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை தனுஷிக் இத்தொடரில் இருந்து விலகுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட விடியோவில், "தவிர்க்க முடியாத சில காரணங்களால் நீ நான் காதல் தொடரில் அஞ்சலி பாத்திரத்தில் என்னால் தொடர முடியாது.

வாய்ப்பு அளித்த விஜய் தொலைக்காட்சிக்கு நன்றி, தொடர் குழுவுக்கு நன்றி. இனி அஞ்சலியாக நடிக்கவுள்ள ஸ்வேதாவுக்கும் நீங்கள் ஆதரவு தர வேண்டும். கனத்த இதயத்தோடு விடைபெறுகிறேன்” என்று பேசியுள்ளார்.

முன்னதாக இத்தொடரில் இருந்து நடிகை சாய் காயத்ரி விலகிய நிலையில், தற்போது தனுஷிக் விலகியுள்ளார்.

குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமா? வெளியான அறிவிப்பு!

குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்காக சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற பிப். 8 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்க... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கில் வாக்குப்பதிவு நிறைவு!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. மேலும் பார்க்க

பிப். 26 முதல் அரசுப் பேருந்துகள் இயங்காது: அண்ணா தொழிற்சங்கம்

வரும் பிப். 26 முதல் அரசுப் பேருந்துகள் இயங்காது என்று அண்ணா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.சென்னையில் அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையில் கீழ் செயல்படும் கூட்டமைப்பு சங்களின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 2 நாள்... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கில் 64.02% வாக்குப்பதிவு!

இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.02% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையடுத்து இத்தொகுதிக்கு... மேலும் பார்க்க

தமிழகத்தில் 10 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்! - அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் அளவு 10 லட்சம் மெட்ரிக் டன்னைத் தாண்டியதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற... மேலும் பார்க்க

பிற்பகல் 3 மணி: ஈரோடு கிழக்கு வாக்குப்பதிவு நிலவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 53.63% வாக்குகள் பதிவாகியுள்ளன.ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்ரவரி 5) காலை 7 மணிக்கு த... மேலும் பார்க்க