செய்திகள் :

டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்! சாதனை படைத்த ரஷீத்கான்!

post image

டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ரஷீத்கான் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான், ஐபிஎல், பிபிஎல், சிபிஎல், பிக்-பாஸ் உள்ளிட்ட அனைத்து டி20 லீக் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் டுவைன் பிராவோவை முந்தி டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

தென்னப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் போட்டியில் ரஷீத் கான் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். இந்தப் போட்டியின் போது, ​​ரஷீத் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையும் படிக்க |கம்மின்ஸ் காயம்: சாம்பியன்ஸ் டிராபி ஆஸி. அணியின் புதிய கேப்டன் யார்?

இதுவரை 461 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரஷீத் கான் 633* விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில், நான்கு முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பல அணிகளுக்காக விளையாடியுள்ள பிராவோவின் 18 ஆண்டுகால டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் 631 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் அவரது டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் 3 முறை ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் சுழற்பந்து வீச்சாளரும் ஆல்ரவுண்டருமான சுனில் நரைன் (574 விக்கெட்டுகள் 536 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் 428 போட்டிகளில் 531 விக்கெட்டுகளும், வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் (444 போட்டிகளில் 492 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

26 வயதான ரஷீத் கான் இதே ஃபார்மில் விளையாடும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனையும் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க |வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து சிறப்பாக செயல்படும்: கெவின் பீட்டர்சன்

பிற்பகல் 1 மணி: தில்லி தேர்தலில் 33.31% வாக்குகள் பதிவு!

தில்லி பேரவைத் தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 33.31% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.தலைநகர் தில்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு... மேலும் பார்க்க

பக்தி உணர்வால் நிறைந்தேன்: புனித நீராடிய பிரதமர் மோடி பெருமிதம்!

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கான மக்களைப் போல நானும் பக்தி உணர்வால் நிறைந்தேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மகா கும்பமேளா இந்த... மேலும் பார்க்க

ஆமைவேகத்தில் செல்லும் அதிவேக புல்லட் ரயில் திட்டம்?

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2026 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டு வந்தநிலையில், 2033-தான் செயல்படும் என்று கூறப்படுகிறது.இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் 2026 ஆம் ஆண்டில் செய... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: கேஜரிவால், அதிஷி உள்ளிட்டோர் வாக்களித்தனர்!

தில்லி பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் கேஜரிவால் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். தலைநகர் தில்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வரு... மேலும் பார்க்க

நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநருடன் ராகுல் டிராவிட் வாக்குவாதம்!

நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்த டிராவிட்டின் விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.அமைதியான ஆட்டம் மற்றும் மிகச்சிறந்த தலைமைக்கு பெயர் பெற்றவரான ராகுல் டிராவிட், பெங்களூருவில் ஒரு ஆ... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி வாக்களித்தனர்!

தில்லி பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வாக்களித்தனர். தலைநகர் தில்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொட... மேலும் பார்க்க