செய்திகள் :

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை! இன்றைய நிலவரம்

post image

வாரத்தின் முதல் நாளான இன்று(ஜன. 27) பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
78,704.60 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

காலை 11. 30 மணியளவில் சென்செக்ஸ் 199.99 புள்ளிகள் குறைந்து 78,383.82 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 5.05 புள்ளிகள் உயர்ந்து 23,744.30 புள்ளிகளில் முடிந்தது.

சென்செக்ஸ் பங்குகளில், ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்லே இந்தியா, சன் பார்மா மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

அதே நேரத்தில் இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் நிதி, டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, சொமாட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.

கும்பமேளா மரணங்களை பாஜக மறைத்துவிட்டது: திமுக குற்றச்சாட்டு

கும்பமேளா கூட்ட நெரிசலில் 48 பேர் இறந்துள்ள நிலையில், மரணங்களைக் கூட மறைத்து தவறான கணக்கைக் காட்டியுள்ளதாக பாஜகவை திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'முரசொலி' கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. உத்தரப்... மேலும் பார்க்க

மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு திருப்பரங்குன்றத்தில் கூடுவோம்: செல்வப்பெருந்தகை

மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு திருப்பரங்குன்றத்தில் நாளை(பிப். 6) அணிதிரள்வோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பரங்குன்றம் கோயில... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கில் பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.41% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்ரவரி 5) காலை 7 மணிக்கு ... மேலும் பார்க்க

திமுக அரசு எதிர் கட்சிகளுடைய ஜனநாயகத்தை நசுக்க பார்க்கிறது: வானதி சீனிவாசன்

கோவை: திமுக அரசு எதிர் கட்சிகளுடைய ஜனநாயகத்தை நசுக்க பார்க்கிறது என பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினாா்.கோவை மக்கள் சேவை மையம் மற்றும்... மேலும் பார்க்க

இனி என்ன சொல்லப் போகிறார் ஆளுநர் ரவி?: அமைச்சர் ரகுபதி கேள்வி

மாநில அரசிற்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே? என சட்ட அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பிய... மேலும் பார்க்க

காலை 11 மணி நிலவரம்: ஈரோடு கிழக்கில் 26.03% வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 26.03% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்ரவரி 5) காலை 7 மணிக்கு தொ... மேலும் பார்க்க