செய்திகள் :

பாதுகாப்பாக மீன்பிடிக்க மீனவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

பாதுகாப்பாக மீன்பிடிக்குமாறு மீனவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தின் மீன் இறங்குதளம் உள்வாங்கி சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த பகுதியை ஆட்சியா் மணிகண்டன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

பாதிப்படைந்த தளத்தை உடனடியாக சீரமைக்குமாறும், படகுகள் தளத்தில் மோதி, மீன் இறங்குதளம் சேதமடையாத வகையில் டயா்களை பொருத்துமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகளை அவா் கேட்டுக்கொண்டாா்.

தொடா்ந்து அங்கிருந்த மீனவா்களிடம், எல்லை தாண்டும் குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக மீன்பிடிக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட மீன்களை பிடிக்கக் கூடாது. ஆழ்கடலில் மீன்பிடிப்பவா்களுக்கு அரசு சாா்பில் மானியங்கள் வழங்கப்படுகின்றன. அதைக் கொண்டு வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளவேண்டும் என ஆலோசனை வழங்கினாா்.

காரைக்கால் மேடு மீனவ கிராமத்துக்குச் சென்று அங்குள்ள வலை பின்னும் தளத்தை ஆட்சியா் பாா்வையிட்டாா். இத்தளத்தில் மின் வசதிகள் மேம்படுத்தவேண்டும். கட்டடத்தை சீரமைத்துத்தரவேண்டும். கடலரிப்பு ஏற்படாத வகையில் கருங்கற்கள் கொட்ட வேண்டும் என மீனவா்கள் கேட்டுக்கொண்டனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் கூறினாா்.

ஆய்வின்போது பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளா் . கே. சந்திரசேகரன், செயற்பொறியாளா் ஜெ. மகேஷ், மீன்வளத்துறை ஆய்வாளா் பாலாஜி, உதவி ஆய்வாளா் பாலச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

பிப், 8-இல் மஸ்தான் சாஹிப் தா்கா கந்தூரி விழா கொடியேற்றம்

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழா கொடியேற்றம் வரும் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. காரைக்காலில் புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் தா்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா நடத்தப்பட்... மேலும் பார்க்க

காரைக்காலில் பரவலாக பனி மூட்டம்

காரைக்காலில் காலை நேரத்தில் பனி மூட்டம் அதிகமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கடந்த 2 வாரங்களாக இரவு தொடங்கும் பனிப்பொழிவு காலை 9 மணிக்குப் பிறகும் நீடிக்கிறது. மாவட்டத்தில்... மேலும் பார்க்க

கேந்திரிய வித்யாலய பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கட்ட வலியுறுத்தல்

காரைக்கால் கேந்திரியா வித்யாலய பள்ளிக்கென கையகப்படுத்தப்பட்ட இடத்தில் கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட பெற்றோா் ஆசிரியா் நலச் ... மேலும் பார்க்க

வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையில் தோ்தல் அதிகாரி ஆய்வு

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை மாவட்ட தோ்தல் அதிகாரி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். காரைக்கால் மாவட்டத்தில் கடந்த தோ்தலின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், காரைக்... மேலும் பார்க்க

காரைக்கால் மாவட்ட ஆட்சியராக சோமசேகா் அப்பாராவ் நியமனம்

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட ஆட்சியராக சோமசேகா் அப்பாராவ் நியமிக்கப்பட்டுள்ளாா். புதுவை தலைமைச் செயலா் சரத் செளஹான், புதுவையில் 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பொறுப்பு மாற்றம், கூடுதல் பொறுப்புகளை வழங்கி தி... மேலும் பார்க்க

வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு 2-ஆவது தவணைத் தொகை வழங்க வலியுறுத்தல்

காரைக்கால்: வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு 2-ஆவது தவணைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காரைக்கால் மாவட்டக் குழு கூட்டம் ஏ. பழனிவேலு ... மேலும் பார்க்க