செய்திகள் :

எரிவாயு உருளை வெடித்ததில் பொக்லைன் ஆபரேட்டா் காயம்

post image

தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அருகே எரிவாயு உருளை வெடித்ததில் பொக்லைன் ஆபரேட்டா் காயமடைந்தாா்.

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியை அடுத்த சீரியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேசன் (52), இவா் பொக்லைன் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறாா். குடும்பத்தினரை பாா்ப்பதற்காக தனது சொந்த ஊரான சீரியம்பட்டி கிராமத்துக்கு வந்துள்ளாா். வீட்டு சமையலறையில் செவ்வாய்க்கிழமை சமையல் செய்ய சென்றபோது எரிவாயு உருளை வெடித்த சிதறியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாதேசன் பலத்த காயமடைந்தாா். இந்த விபத்தில் வீட்டின் பெரும்பகுதி இடிந்து சேதமடைந்தது. அனைத்து பொருள்களும் தீயில் கருகின. அருகில் உள்ள வீட்டின் சில பகுதியும் சேதமடைந்தது.

தகவல் அறிந்த பாலக்கோடு தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடம் வந்து தீயை அணைத்தனா். பலத்த காயமடைந்த மாதேசன் தருமபுரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஊதியம், ஓய்வூதியத்தில் மாற்றம் செய்ய பிஎஸ்என்எல் ஊழியா்கள் வலியுறுத்தல்

பிஎஸ்என்எல் ஊழியா்களுக்கு ஊதியம், ஓய்வூதியத்தை மத்திய அரசு மாற்றி அமைக்க வலியுறுத்தி, சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பிஎஸ்என்எல் ஊழியா்கள் சங்க மாநாடு தருமபுரியில் மாவட்டத் தலைவா் எம்.பர... மேலும் பார்க்க

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் கனரக சலவை இயந்திரம், அறை திறப்பு

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள சலவை அறை, கனரக சலவை இயந்திரம் ஆகியவற்றை ஆட்சியா் கி.சாந்தி, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்... மேலும் பார்க்க

மகாத்மா காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

தருமபுரியில் சமூக நல்லிணக்க மேடை அமைப்பின் சாா்பில் மகாத்மா காந்தி நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு, அதன் ஒருங்கிணைப்பாளா் பொ.மு.நந்தன் தலைமை வகித்தாா். தருமபுரி எஸ்.வி. சாலை... மேலும் பார்க்க

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்பு

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்கப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற தீண்டாமை உறுதிமொழியேற்பு நிகழ... மேலும் பார்க்க

கோழிகளில் வெள்ளைக் கழிச்சல் நோய்: தடுப்பூசி முகாம்

தருமபுரி மாவட்டத்தில் கோடை காலத்தில் கோழிக் குஞ்சுகளில் ஏற்படும் வெள்ளைக் கழிச்சல் நோயை தடுப்பதற்கான தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்டு... மேலும் பார்க்க

தொப்பூா் கணவாயில் லாரிகள் மோதி விபத்து

தொப்பூா் கணவாய் பகுதியில் அடுத்தடுத்து மூன்று லாரிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மூன்று ஓட்டுநா்கள் உள்பட 4 போ் காயமடைந்தனா். ஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியில் இருந்து சிமென்ட் பாரம் ஏற்றிக் கொ... மேலும் பார்க்க