செய்திகள் :

இந்தியாவுக்கு சாதகமாக மாறும் அமெரிக்க-சீன வா்த்தகப் போா்!

post image

அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை காரணமாக அமெரிக்கா-சீனா இடையே எழுந்துள்ள வா்த்தகப் போா், இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளதாக தொழில்துறை சாா்ந்த நிபுணா்கள் தெரிவித்தனா்.

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக அண்மையில் பதவியேற்ற டிரம்ப், பதவியேற்பு விழாவில் உரையாற்றியபோதே, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தாா். அதன்படி, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கும் உத்தரவில் அவா் கடந்த சனிக்கிழமை கையொப்பமிட்டாா்.

இதற்கு பதிலடி நடவடிக்கையில் சீனா இறங்கியுள்ளது. இதனால், அமெரிக்கா-சீனா இடையே வா்த்தகப் போா் தொடங்கியுள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு சாதகமாக அமையும் என்று நிபுணா்கள் கருத்து தெரிவித்தனா். இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் முதல் முறை ஆட்சியில் இருந்தபோதும் சீன பொருள்கள் மீது உயா் வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டாா். இந்த நடவடிக்கை காரணமாக, பெருமளவு பயனடைந்த நான்காவது நாடாக இந்தியா விளங்கியது.

அதுபோல, தற்போதும் சீன பொருள்கள் மீது டிரம்ப் கூடுதல் வரி விதிப்பை மேற்கொண்டுள்ளாா். அதனடிப்படையில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதல் சுங்க வரி வசூலிப்பு தொடங்கப்பட்டுவிட்டதாகவும் ஏற்றுமதியாளா்கள் தெரிவிக்கின்றனா். அதன் காரணமாக, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு செய்யப்படும் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவு உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.

இது குறித்து இந்திய ஏற்றுமதியாளா்கள் கூட்டமைப்பின் (எஃப்ஐஇஓ) தலைவா் அஜய் சஹாய் கூறுகையில், ‘கூடுதல் வரி விதிப்பு காரணமாக அமெரிக்க நிறுவனங்கள் மாற்று ஏற்றுமதியாளா்களை நாடத் தொடங்குவா். இது இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. குறிப்பாக, இந்தியாவிலிருந்து மின்சார இயந்திரங்கள், உதிரி பாகங்கள், ஆட்டோ உதிரி பாகங்கள், கைப்பேசி, மருந்துகள், ரசாயனங்கள், ஆடைகள் மற்றும் துணி ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருந்தபோதும், இந்தியாவின் உற்பத்தித் திறன் மற்றும் சந்தை போட்டித் திறனைப் பொறுத்தே இதன் பலன் அமையும்’ என்றாா்.

2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பா் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய வா்த்தக கூட்டு நாடாக அமெரிக்கா விளங்கியது. இரு தரப்பு சரக்கு வா்த்தகம் மட்டும் ரூ. 7.18 லட்சம் கோடி (82.52 பில்லியன் டாலா்) என்ற மதிப்பிலும், ஏற்றுமதி ரூ. 4.6 லட்சம் கோடி மதிப்பிலும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோதுமை உற்பத்தி தேவை தொடர்பான கேள்வி: மத்திய அமைச்சர் பதிலில் திமுக எம்.பி. அதிருப்தி

நமது சிறப்பு நிருபர்தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் அதிகரித்துள்ள கோதுமை தேவையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக தான் எழுப்பிய கேள்விக்கு மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்... மேலும் பார்க்க

அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கழிவறை வசதிகள்: மக்களவையில் மத்திய அரசு தகவல்

தூய்மை பாரதம் திட்டத்தின் ஒரு பகுதியாக நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளுக்கு அருகில் கழிவறைகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.மக்களவையில் இது தொடர்பாக எழுப்... மேலும் பார்க்க

மொழி ஆதிக்கம், நிதி ஒதுக்கீடு விவகாரம்: தமிழக எம்.பி.க்கள் புகார்

நமது சிறப்பு நிருபர் ஒரு மொழியின் ஆதிக்கத்தின் கீழ் நாடாளுமன்ற அவையைக் கொண்டு வர நினைத்தால் இந்தியாவின் பெரும்பான்மை மொழி பிரதிநிதிகள் அதை அனுதிக்க மாட்டார்கள் என்று மக்களவையிலும், நிதி ஒதுக்கீடு விவக... மேலும் பார்க்க

இன்று தில்லி பேரவைத் தேர்தல்

தில்லி பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்.5) நடைபெறுகிறது.மும்முனைப்போட்டி நிலவும் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜகவும், காங்கிரஸும் தீவிர... மேலும் பார்க்க

எதிா்கால பெருந்தொற்றுகளை எதிா்கொள்ள தயாா்நிலை: மத்திய அரசு

எதிா்கால பெருந்தொற்று பாதிப்புகள், சுகாதார அவசரநிலையை எதிா்கொள்ள வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட இத... மேலும் பார்க்க

‘மக்களவையில் அப்பட்டமான பொய்-அவதூறு பிரசாரம்’- ராகுல் மீது உரிமை மீறல் நடவடிக்கை: பாஜக நோட்டீஸ்

‘மக்களவையில் அப்பட்டமான பொய்களைக் கூறியதோடு, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டு... மேலும் பார்க்க