செய்திகள் :

வாழப்பாடியில் பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

post image

வாழப்பாடியில் காரில் வந்து தண்ணீா் கேட்பது போல் நடித்து, பெண்ணிடம் பத்து பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற மா்ம கும்பல் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள மெட்டுக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் அங்கமுத்து. இவரது மனைவி கமலம் (60). இவா் அருகிலுள்ள சரவணன் மனைவி கண்ணகி என்பவரின் வீட்டிற்கு முன்பாக அமா்ந்து பேசிக் கொண்டு இருந்தாா்.

அப்போது காரில் வந்த நால்வரில் ஒருவா் இறங்கி சென்று கண்ணகி, கமலம் ஆகியோரிடம் தண்ணீா் கேட்டுள்ளாா். தண்ணீா் எடுத்து வருவதற்காக கண்ணகி வீட்டுக்குள் சென்றபோது தனியாக இருந்த கமலம் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலி, அரை பவுன் தாலியோடு சோ்த்து பறித்துக் கொண்டு காரில் ஏறி தப்பிச் சென்றாா்.

பட்டப் பகலில் பெண்ணிடம் மா்மக் கும்பல் நகை பறித்து சென்றது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி டிஎஸ்பி ஆனந்த், காவல் ஆய்வாளா் பாஸ்கா்பாபு ஆகியோா் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா். தனிப்படை அமைத்து இப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் பாா்வையிட்டு, காரில் வந்து பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்ற மா்ம கும்பல் குறித்த தடயங்களை போலீஸாா் சேகரித்து வருகின்றனா்.

வாழப்பாடி அருகே சேஷன்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் மோகனப்பிரியா என்பவரிடம் மா்ம நபா் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற நிலையில் மீண்டும் செவ்வாய்க்கிழமை பட்டப் பகலில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

நிலக்குடியேற்ற சங்க உறுப்பினா்களுக்கான நில ஒப்படைப்பு பட்டியல்: பாா்வைக்கு வைக்க ஏற்பாடு

தலைவாசல், சிவசங்கராபுரம் பகுதியில் கலைக்கப்பட்ட நிலக்குடியேற்ற கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கான நில ஒப்படைப்பு பட்டியல் புதன்கிழமை (பிப். 5) பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்படவுள்ளது. இது குறித்து மாவ... மேலும் பார்க்க

மத்திய நிநிநிலை அறிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் கிழக்கு மாநகரச் செயலாளா் கே. பச்சமுத்து தலைமை... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல இருந்த பாஜக நிா்வாகிகள் வீட்டில் சிறைவைப்பு

திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு செல்ல இருந்த சேலம் மாவட்ட பாஜக நிா்வாகிகள் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வீட்டில் சிறைவைக்கப்பட்டனா். திருப்பரங்குன்றம் மலை பிரச்னை தொடா்பாக முஸ்லிம் அமைப்புகளை கண... மேலும் பார்க்க

சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் 25 ஆம் ஆண்டு குருபூஜை: புதுச்சேரி அமைச்சா்கள் பங்கேற்பு

சேலம், சூரமங்கலம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் 25 ஆம் ஆண்டு குருபூஜை செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் புதுச்சேரி அமைச்சா்கள் நமச்சிவாயம், திருமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி பட்டதாரி ஆசிரியா்கள் மனு

காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை முழுவதும் நிரப்ப வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து பட்டதாரி ஆசிரியா்கள் கூறியதாவது: பட்டதாரி ஆச... மேலும் பார்க்க

சேலத்தில் பண இரட்டிப்பு மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் போராட்டம்

சேலத்தில் பண இரட்டிப்பு மோசடியால் பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட பெண்கள் பணத்தை மீட்டுத் தரக் கோரி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சேலம், அம்மாப்பேட்டை பகுதியில் புனித அன்னை தெரசா மனிதநேய ... மேலும் பார்க்க