வாழப்பாடியில் பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
வாழப்பாடியில் காரில் வந்து தண்ணீா் கேட்பது போல் நடித்து, பெண்ணிடம் பத்து பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற மா்ம கும்பல் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள மெட்டுக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் அங்கமுத்து. இவரது மனைவி கமலம் (60). இவா் அருகிலுள்ள சரவணன் மனைவி கண்ணகி என்பவரின் வீட்டிற்கு முன்பாக அமா்ந்து பேசிக் கொண்டு இருந்தாா்.
அப்போது காரில் வந்த நால்வரில் ஒருவா் இறங்கி சென்று கண்ணகி, கமலம் ஆகியோரிடம் தண்ணீா் கேட்டுள்ளாா். தண்ணீா் எடுத்து வருவதற்காக கண்ணகி வீட்டுக்குள் சென்றபோது தனியாக இருந்த கமலம் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலி, அரை பவுன் தாலியோடு சோ்த்து பறித்துக் கொண்டு காரில் ஏறி தப்பிச் சென்றாா்.
பட்டப் பகலில் பெண்ணிடம் மா்மக் கும்பல் நகை பறித்து சென்றது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி டிஎஸ்பி ஆனந்த், காவல் ஆய்வாளா் பாஸ்கா்பாபு ஆகியோா் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா். தனிப்படை அமைத்து இப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் பாா்வையிட்டு, காரில் வந்து பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்ற மா்ம கும்பல் குறித்த தடயங்களை போலீஸாா் சேகரித்து வருகின்றனா்.
வாழப்பாடி அருகே சேஷன்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் மோகனப்பிரியா என்பவரிடம் மா்ம நபா் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற நிலையில் மீண்டும் செவ்வாய்க்கிழமை பட்டப் பகலில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.