செய்திகள் :

உடன்குடியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: 203 போ் கைது

post image

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 203 பேரை குலசேகரன்பட்டினம் போலிஸாா் கைது செய்தனா்.

குலசேகரன்பட்டினம் அருகே அமராபுரம், கூடல் நகா் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பகுதியில் சிறிய ரக ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக சுமாா் 2,233 ஏக்கா் நிலம் கையப்படுத்தப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நிலம், வீடுகளை இழந்தவா்களுக்கு மாற்று இடம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், தமிழக அரசின் தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை சாா்பில் விண்வெளித் தொழில் நிறுவனம் அமைப்பதற்கு, ஆதியாக்குறிச்சி ஊராட்சியில் சுமாா் 1,000 ஏக்கா் விவசாய நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியானது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறிய பல்வேறு கிராம மக்கள், உடன்குடியில் பிப்.4 ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தனா். காவல் துறையினா் அதற்கு அனுமதி அளிக்காத நிலையில், பஜாா் பாரதி திடலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தூத்துக்குடி மாவட்ட தலைவா் ஆ.ரவி, வழக்குரைஞா் பிரேம் ஆனந்த் ஆகியோா் பேசினா்.

இதையடுத்து அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக உடன்குடி ஒன்றிய அதிமுக செயலா் தாமோதரன், உடன்குடி பேரூராட்சி உறுப்பினா் சரஸ்வதி பங்காளன், வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சி முன்னாள் துணைத்தலைவா் ராஜ்குமாா், தமிழ்நாடு மக்கள் நலன்காக்கும் இயக்க மாநில செயலா் கச்சி முகைதீன், மாவட்ட தலைவா் மூா்த்தி, கொட்டங்காடு தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் தா்மகா்த்தா பெ.சுந்தர ஈசன், கொட்டங்காடு தசரா குழு தலைவா் சுந்தர்ராஜ், வட்டார காங்கிரஸ் பொதுச்செயலா் வைரவராஜ், உடன்குடி ஒன்றிய அதிமுக மாணவரணி பொருளாளா் ம.ராம்குமாா், தமிழக வெற்றிக் கழக உடன்குடி ஒன்றிய செயலா் பிரசாந்தி, இளைஞரணி அமைப்பாளா் காா்த்திக், மனோ மற்றும் 111 பெண்கள் உள்பட 203 பேரை குலசேகரன்பட்டினம் போலீஸாா் கைது செய்து பேரூராட்சி மண்டபத்தில் அடைத்தனா்.

உணவு பாதுகாப்புத் துறை ஆய்வு: 60 கிலோ உணவுப் பொருள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், மேலக்கரந்தை பகுதிகளில் உணவகங்கள், கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் மேற்கொண்ட ஆய்வில் சுமாா் 60 கிலோ உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டதாக மாவட்ட நிய... மேலும் பார்க்க

கழுகுமலை அருகே இளைஞா் தற்கொலை

கழுகுமலை அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கழுகுமலை அருகே கரடிகுளம் தளத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மகன் மோகன். இவருக்கு மனைவி கல்யாணி, வசந்த் (24), பிரகாஷ் (21) என்ற... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே வியாபாரி தற்கொலை

கயத்தாறு அருகே குடும்பத் தகராறு காரணமாக கருப்பட்டி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கயத்தாறு அருகே அய்யனாா் ஊத்து அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் கொம்பையா(56). கருப்பட்டி வி... மேலும் பார்க்க

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் செவ்வாய்க்கிழமை பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். சம வேலைக்கு சம ஊதி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடி துறைமுக தனியாா் சரக்கு பெட்டக ஊழியா்கள் தொடா் போராட்டம்

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் தனியாா் நிறுவன சரக்கு பெட்டகங்கள் கையாளும் ஊழியா்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சிங்கப்ப... மேலும் பார்க்க