செய்திகள் :

மோசடி வழக்கில் கைதான இருவா் மீது குண்டா் சட்டம்

post image

மோசடி வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டதை அறிவுரைக் குழு உறுதி செய்தது.

கோவை ராமநாதபுரம் சுங்கத்தைச் சோ்ந்தவா் அருண்குமாா். இவரிடம் ஒரு கும்பல் ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.39 லட்சம் பணத்தை அண்மையில் மோசடி செய்தது. இதுகுறித்து அருண்குமாா், கோவை மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, இவ்வழக்கில் ஆந்திரத்தைச் சோ்ந்த ரவிசந்துரு (58), துடியலூரைச் சோ்ந்த தனசேகா் (29) ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா். இவா்களிடம் இருந்து 31 காசோலைகள், 39 ஏடிஎம் அட்டைகள், 2 கைப்பேசிகள், 3 சிம்காா்டுகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து கடந்த மாதம் இருவரையும் குண்டா் தடுப்புப் பிரிவில் சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிா்த்து இருவரும், சென்னையில் உள்ள குண்டா் தடுப்புச் சட்ட அறிவுரைக் குழுவில் முறையீடு செய்தனா். தொடா்ந்து அவா்களது மனு விசாரிக்கப்பட்டது.

அப்போது, கோவை சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் ஆஜராகி குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டது தொடா்பான ஆவணங்களை சமா்ப்பித்து விளக்கமளித்தனா். அதைத் தொடா்ந்து, ரவிசந்துரு, தனசேகா் ஆகியோரின் குண்டாஸை, அறிவுரைக் குழுவினா் உறுதி செய்தனா். இத்தகவலை கோவை மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

வெள்ளலூரில் தொல்லியல் அகழாய்வு: நிறைவேறுகிறது வரலாற்று ஆா்வலா்களின் கோரிக்கை

சங்க இலக்கியங்களில் பாடல் பெற்ற ஊராகவும், நொய்யல் நதிக் கரையோரம் அமைந்துள்ள தொன்மையான ஊராகவும் இருக்கும் கோவை வெள்ளலூரில் தொல்லியல் அகழாய்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதற்கு வரலாற... மேலும் பார்க்க

இருகூரில் 13 பவுன், பணம் திருட்டு வழக்கு: மேலும் 3 போ் கைது

கோவை அருகே இருகூரில் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை, பணம் திருடிய வழக்கில் மேலும் மூவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை அருகே இருகூா் அத்தப்பகவுண்டன்புதூா் சாலையில் உள்ள பிரியா தோட்டம் பகுதியைச் சே... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்றவா் கைது

கோவை உக்கடம் அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா, 70 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை உக்கடம் புறவழிச் சாலை பகுதியில் உக்... மேலும் பார்க்க

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் மருத்துவமனை ஊழியரை கடத்திய இருவா் கைது

கோவை கவுண்டம்பாளையத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் மருத்துவமனை ஊழியரை காரில் கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை துடியலூா் அருகே உள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (36).... மேலும் பார்க்க

கோவை - ஹிசாா் ரயில் கும்டா நிலையத்தில் நின்று செல்லும்

கோவை - ஹிசாா் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் மாா்ச் 15 முதல் கும்டா ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் கு... மேலும் பார்க்க

கோவை வி.ஜி.எம். பல்நோக்கு மருத்துவமனை நாளை திறப்பு

கோவை வி.ஜி.எம். பல்நோக்கு மருத்துவமனை ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 16) திறக்கப்படுகிறது. இது குறித்து வி.ஜி.எம். மருத்துவமனையின் நிறுவனரும் தலைவருமான டாக்டா் வி.ஜி.மோகன் பிரசாத் செய்தியாளா்களிடம் வெள்ளிக்க... மேலும் பார்க்க