செய்திகள் :

ராகுலின் இரட்டை குடியுரிமை புகாா் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் தொடா்பாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி உள்துறை அமைச்சகத்தில் அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் தொடா்பாக கா்நாடக மாநில பாஜக நிா்வாகி எஸ்.விக்னேஷ் சிஷிா் சாா்பில் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இதுதொடா்பாக சுப்பிரமணியன் சுவாமி சாா்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகாா் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.

அதில், ‘ராகுல் காந்தி பிரிட்டன் கடவுச்சீட்டு விசாரணையின்போது, தான் ஒரு பிரிட்டன் குடிமகன் என்று பிரிட்டன் அரசிடம் வாக்குமூலம் அளித்துள்ளாா். இதன் மூலம், இந்திய குடிமகனாக அரசமைப்புச் சட்டப் பிரிவு 9-ஐ ராகுல் காந்தி மீறியுள்ளாா். அதற்காக, அவருடைய இந்திய குடியுரிமை பறிக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தாா்.

இந்தப் புகாா் தொடா்பாக விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் ராகுல் காந்திக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், அதன் பிறகு இதுதொடா்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், தனது புகாா் நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தெரியப்படுத்த உத்தரவிடக் கோரி சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய தலைமையிலான அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சுப்பிரமணியன் சுவாமி அளித்த புகாரின் நிலை குறித்து மத்திய அரசிடம் கேட்டு தெரியப்படுத்துமாறு மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞரை அறிவுறுத்தினா்.

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் விபத்து: 5 பேர் பலி

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் வாரணாசி அருகே இன்று(வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளானதில் கர்நாடகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடகத்தின் பிதர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 ... மேலும் பார்க்க

கார் விபத்தில் இறந்தவர்களின் உடல்கூறாய்வில் அதிர்ச்சி! கொலையா?

அண்மைக் காலமாக, தொழிலதிபர்கள் குடும்பத்துடன் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொல்கத்தாவில் வேகமாகச் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில், அது விபத்து அல்ல கொலை, தற்கொலை என வ... மேலும் பார்க்க

தில்லி கூட்ட நெரிசல்: எக்ஸ் தளத்தில் விடியோக்களை நீக்க ரயில்வே அமைச்சகம் உத்தரவு!

புது தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது தொடர்பான விடியோக்களை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்குமாறு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா க... மேலும் பார்க்க

வயதான தாயை வீட்டில் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் கும்பமேளா சென்ற மகன்!

வயதான தாயை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் புனித நீராடச் சென்ற மகன் பற்றிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.வீட்டுக்குள் இருந்த உணவு தீர்ந்துவிட்டதால் பசியால் அழுத மூதாட்டியின் சப்... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் செல்ல முடியாத சிறைக் கைதிகளுக்கு.. உ.பி. அரசு சிறப்பு ஏற்பாடு!

உத்தரப் பிரதேசத்தி்ன், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியாத சிறைக் கைதிகளுக்கு உ.பி. அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக சிறைத்துறை அமைச்சர் தாரா சிங் சௌகான் க... மேலும் பார்க்க

பாதுகாப்புத் துறை விஞ்ஞானிக்கு அரிய சிகிச்சை! 5 சிறுநீரகங்கள்.. ஆனால்!

மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்றி வரும் விஞ்ஞானி தேவேந்திர பல்லேவாருக்கு நடத்தப்பட்ட மூன்றாவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதன் மூலம் அவரது உடலில் 5 சிறுநீரகங்கள் உள... மேலும் பார்க்க