செய்திகள் :

தன்னையறிதல் முக்கியம்..! சிஎஸ்கேவில் எவ்வளவு காலம் விளையாடுவேன்? தோனியின் பேட்டி!

post image

உலகக் கோப்பைகளை வென்ற முன்னாள் இந்திய கேப்டன், 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் தோனியுடன் சஞ்சு சாம்சனும் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் தோனி இன்னும் சில ஆண்டுகள் சிஎஸ்கேவில் விளையாடுவதாக விருப்பம் தெரிவித்தார்.

43 வயதாகும் தோனி கடந்த சீசனில் கேப்டன்சியை விட்டுக்கொடுத்தார்.

தற்போது, ருதுராஜ் கேப்டனாக இருக்கிறார். இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் தொடங்கவிருக்கிறது.

இந்தியாதான் எனக்கு முக்கியம்

நிகழ்ச்சியில் தோனி கூறியதாவது:

சர்வதேச கிரிக்கெட்டில் 2019ஆம் ஆண்டிலிருந்து நான் ஓய்வு பெற்றேன். சிறிது நீண்ட நாள்கள் ஆகிவிட்டன. நான் இன்னும் விளையாடும் சில ஆண்டுகளில் மகிழ்ச்சியாக அனுபவித்து விளையாட விரும்புகிறேன். பள்ளியில் சிறிய வயதில் எவ்வளவு மகிழ்ச்சியாக விளையாடினேனோ அதேமாதிரி விளையாட விரும்புகிறேன்.

காலனியின் வசிக்கும்போது மாலை 4 மணி விளையாட்டுக்கான நேரம். நாங்கள் பெரும்பாலும் கிரிக்கெட்தான் விளையாடுவோம். காலநிலை சரியில்லையென்றால் கால்பந்து விளையாடுவோம். அதே அளவான அப்பாவித்தனத்துடன் இப்போதும் விளையாட நினைக்கிறேன். ஆனால், செய்வதைவிட சொல்வது எளிதுதான்.

ஒரு கிரிக்கெட்டராக எனக்கு நான் இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடவே விரும்புகிறேன். ஏனெனில், அனைவருக்கும் இந்திய அணியில் விளையாட இடம் கிடைப்பதில்லை. மிகப்பெரிய போட்டிகள் அல்லது வெளிநாடுகளுக்குச் சென்று விளையாடும்போது நாட்டிற்காக வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்கும். எனக்கு எப்போதும் நாடுதான் முதன்மையானதாக இருந்திருக்கிறது.

தன்னையறிதல் முக்கியம்

உங்களுக்கு எது நல்லது என நீங்கள் கண்டறிய வேண்டும். நான் கிரிக்கெட் விளையாடும்போது அதுதான் எனக்கு எல்லாமுமாக இருப்பதாக உணர்கிறேன். வேறெதுவும் முக்கியமாக கருதுவதில்லை.

எந்த நேரத்தில் தூங்க வேண்டும்? எப்போது விழிக்க வேண்டும்? எவையெல்லாம் எனது கிரிக்கெட்டை பாதிக்கும் என்பதுதான் எனக்கு முக்கியமானது.

நண்பர்கள், கேலிப் பேச்சுகள், மற்றவையெல்லாம் பிறகும் நடக்கும். உங்களுக்கு எது சிறந்ததோ அதைக் கண்டறித்து சரியாக செய்தால் எல்லாவற்றுக்கமான சரியான நேரம் உங்களுக்கு கிடைக்கும் என்றார்.

சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கராச்சியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ... மேலும் பார்க்க

எல்லீஸ் பெர்ரி விளாசல்: மும்பை அணிக்கு 168 ரன்கள் இலக்கு!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. 3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் முதல் கட்ட ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூ... மேலும் பார்க்க

அணியில் பிரதான பந்துவீச்சாளர்கள் இல்லை, ஆனால்... ஸ்டீவ் ஸ்மித் கூறுவதென்ன?

ஆஸ்திரேலிய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ளது குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இல்லை: பாக். முன்னாள் வீரர்

பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணியில் அதிக அளவிலான போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துப... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான அழுத்தத்தில் இருக்கிறோமா? பாக். வீரர் பதில்!

மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியைப் போன்றே இந்தியாவுக்கு எதிரான போட்டியையும் பார்ப்பதாக பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்க... மேலும் பார்க்க

மனைவியைப் பிரிந்தார் சஹால்..! ரூ.60 கோடி ஜீவனாம்சம் கேட்டாரா தனஸ்ரீ வர்மா?

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா இருவரும் பரஸ்பர முறையில் விவகாரத்து பெற்று பிரிவதாக முடிவெடுத்துள்ளனர். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர... மேலும் பார்க்க