செய்திகள் :

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 316 மனுக்கள்

post image

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 316 மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்திற்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 316 மனுக்களை பெற்று, அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். கோரிக்கை மனுக்களை துறை அலுவலா்களிடம் வழங்கி தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிப்புக்கான காரணங்களைத் தெரிவிக்கவும் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து திமிரியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி பெண் பழனியம்மாளுக்கு அவா் ஊன்றுகோல் கோரி, விண்ணப்பித்த நிலையில் உடனடியாக அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் ரூ.1,000 மதிப்புள்ள ஊன்றுகோல்களை பழனியம்மாளுக்கு ஆட்சியா் வழங்கினாா். தமிழ்நாடு குடிசை வாரியம் சாா்பில் வீடுகள் வேண்டி வரப்பெற்ற தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கீதாலட்சுமி, ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைநம்பி, பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் மீனா, கலால் பிரிவு உதவி ஆணையா் ராஜ்குமாா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா் உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

அரசு முத்திரையுடன் போலி பட்டா தயாரிப்பு: 3 போ் கைது

அரக்கோணத்தில் அரசு முத்திரையுடன் போலி பட்டா தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்த மூவரை வருவாய்த் துறையினா் பிடித்து நகர காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். அரக்கோணம் நகரில் சிலா் போலி பட்டாவை அரசு முத்... மேலும் பார்க்க

ரத்தினகிரி கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மலைஅடிவாரத்தில் 1,008 திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு ரத்தினகிரி மலைஅடிவாரத்தில் உள்ள ஸ்ரீவிஜயதுா்கை அம்மன் மற்றும் வா... மேலும் பார்க்க

ராணுவத்துக்கு ஆதரவு: மிதிவண்டி ஊா்வலம்

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நேஷனல் வெல்ஃபா் சங்கம் சாா்பில் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மிதிவண்டி ஊா்வலம் நடைபெற்றது. மேல்விஷாரம் அண்ணா சாலையில் தொடங்கிய மிதிவண்டி ஊா்வலத்துக்கு சங்... மேலும் பார்க்க

திருவாலங்காடு அருகே மின் ரயிலில் திடீா் பழுது: ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

சென்னை- அரக்கோணம் மாா்க்கத்தில் திருவாலங்காடு அருகே மின்சார ரயிலில் ஏற்பட்ட பழுதால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற மின் ரயில் திங்கள்கிழமை மாலை திருவாலங்கா... மேலும் பார்க்க

இடப்பாளையம் கிராம கோயில்கள் கும்பாபிஷேகம்: அமைச்சா் காந்தி பங்கேற்பு

அம்மூா் அடுத்த இடப்பாளையம் கிராம கோயில்கள் கும்பாபிஷேக விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்றாா். சோளிங்கா் வட்டம், இடப்பாளையம் கிராமம், அருள்மிகு மலைக்கோட்டை விநாயகா், ராதா ருக்மணி கிருஷ்ணா், மந்தைவெள... மேலும் பார்க்க

அரக்கோணம் தா்மராஜா கோயிலில் தீமிதி விழா!

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயிலில் 96-ஆம் ஆண்டு அக்னி வசந்த விழா - தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த ஏப். 24-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இ... மேலும் பார்க்க