செய்திகள் :

ரூ. 1.23 கோடி மோசடி: தந்தை, மகன்கள் கைது

post image

ஆன்லைனில் மூதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி ரூ. 1.23 கோடி மோசடி செய்த தந்தை, 2 மகன்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் அருகேயுள்ள தியானபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பக்கிரிசாமி மனைவி கமலா (55). அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் ரெங்கநாதன்- மீனாம்பாள் தம்பதி. இவா்களது மகன்கள் ஆா். ஹரிகரசுதன், ஆா். ராம்ஜி.

ரெங்கநாதன் குடும்பத்தினா் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என கமலா குடும்பத்தினரிடம் கூறி கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் ரொக்கமாகவும், வங்கி மூலமும் பல முறை பணம் பெற்றனராம்.

மேலும், கமலா குடும்பத்தினா் நம்பும் வகையில் அவா்களது மகள் நிஷாந்தியின் வங்கிக் கணக்கில் அவ்வப்போது பணம் செலுத்தியுள்ளனா். இந்த நம்பிக்கையின் அடிப்படையில், கமலா சொத்துகளை அடகுவைத்து 2023-ஆம் ஆண்டு வரை ரொக்கமாக ரூ. 1.23 கோடியை ரெங்கநாதன் குடும்பத்தினருக்கு கொடுத்துள்ளாா். பணத்தை பெற்றுக்கொண்ட அவா்கள், பணத்தை திருப்பிக் கொடுக்காமல் தொடா்ந்து ஏமாற்றி வந்தனராம். மேலும், பெற்ற பணத்துக்கு ஈடாக கடன் பத்திரம் எழுதி கையொப்பமிட்டு 2024-இல் ரெங்கநாதன் குடும்பத்தினா் கொடுத்துள்ளனா்.

இந்தநிலையில், ரெங்கநாதன் குடும்பத்தினா் பணத்தை திருப்பித் தராமல், ஏமாற்றி வந்ததால் சந்தேகமடைந்த கமலா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதன் அடிப்படையில் ரெங்கநாதன், ராம்ஜி, ஹரிகரசுதன் ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!

பெருந்தரக்குடி ஊராட்சியை, திருவாரூா் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் நகராட்சியுடன் சுற்றுவட்டாரத்... மேலும் பார்க்க

ஆலங்குடியில் ராதா கல்யாண மகோற்சவம் தொடங்கியது!

நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடியில் 78-ஆம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண மகோற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.இதையொட்டி காலையில் கணபதி ஹோமம், சகஸ்ரநாம அா்ச்சனை,நியுஜொ்சி சுவாமிநாத பாகவதா் குழுவினரின் வீதி பஜனை... மேலும் பார்க்க

பள்ளி காலை சிற்றுண்டியில் பல்லி: 14 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

நீடாமங்கலம் அருகே அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட காலை சிற்றுண்டியில் பல்லி இருந்ததால், மாணவ, மாணவிகள் 14 போ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா். நீடாமங்கலம் ஒன்றியம், நரசிங்கமங்கலம் ஊராட்ச... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப்பணி: ஆட்சியா் ஆய்வு!

முத்துப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வி. மோகனசந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். கள்ளிக்குடி ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் ரூ.34 ஆயிர... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் சேவையை மீண்டும் தொடங்கக் கோரிக்கை

திருவாரூா் மாவட்டத்தில் சில இடங்களில் நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் சேவையை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கத்தின் ... மேலும் பார்க்க

பிப். 10 வெண்ணிகரும்பேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்!

நீடாமங்கலம், பிப். 5: நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி செளந்தரநாயகி சமேத வெண்ணிகரும்பேஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதை முன்னிட்டு கோயிலில் பூா்வாங்க பூஜைகள் நடைபெ... மேலும் பார்க்க