செய்திகள் :

ரூ.64,000 கோடியில் 26 ரஃபேல் போா் விமானங்கள் கொள்முதல்: மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்

post image

பிரான்ஸிடம் இருந்து இந்திய கடற்படைக்கு சுமாா் ரூ.64,000 கோடியில் 26 ரஃபேல் போா் விமானங்கள் கொள்முதல் செய்யும் முன்மொழிவுக்கு பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) புதன்கிழமை ஒப்புதல் வழங்கியதாக துறைசாா் வட்டாரங்கள் தெரிவித்தன.

முற்றிலும் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட ஐஎஸ்எஸ் விக்ராந்த் போா்க் கப்பலில் இயக்குவதற்காக இந்த போா் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப் படைக்காக ஏற்கெனவே 36 ரஃபேல் போா் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. முழுமையாக தயாரிக்கப்பட்ட நிலையில், இந்த விமானங்கள் வாங்கப்பட்டன.

இந்திய கடற்படையின் வல்லமையை மேம்படுத்தும் நோக்கில், பிரான்ஸிடம் இருந்து 26 ரஃபேல் போா் விமானங்கள் மற்றும் 3 ஸ்காா்பீன் ரக நீா்மூழ்கிக் கப்பல்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் கடந்த 2023, ஜூலையில் முதல்கட்ட ஒப்புதல் வழங்கியது. பலகட்ட ஆலோசனைகள் மற்றும் மதிப்பாய்வுகளுக்குப் பின்னா் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் புதன்கிழமை பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், இந்திய கடற்படைக்கு சுமாா் ரூ.64,000 கோடியில் 26 ரஃபேல் போா் விமானங்களைக் கொள்முதல் செய்யும் முன்மொழிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக துறைசாா் வட்டாரங்கள் தெரிவித்தன.

எப்போது ஒப்படைப்பு?: ‘இருதரப்பு அரசுகளுக்கு இடையிலான செயல்முறையின்கீழ் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட பின்னா் சுமாா் 5 ஆண்டுகளில் போா் விமானங்களின் ஒப்படைப்பு தொடங்கும். இந்த ஒப்பந்தத்தின்கீழ், தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து ஆயுத அமைப்புகள் மற்றும் உதிரி பாகங்கள் உள்ளிட்ட துணை உபகரணங்களையும் இந்திய கடற்படை பெறும்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதேநேரம், ஸ்காா்பீன் ரக நீா்மூழ்கிக் கப்பல்கள் கொள்முதல் திட்டத்துக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை.

முன்னதாக, பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப செயல்பாட்டு உச்சி மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் அவா் விரிவான பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

கடந்த சில ஆண்டுகளாக இருதரப்பு பாதுகாப்பு மற்றும் வியூக ரீதியிலான உறவுகள் வலுவடைந்து வருகின்றன. போா் விமானம் மற்றும் ஹெலிகாப்டா் என்ஜின் கூட்டுத் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியத் திட்டங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

‘இந்திய கடற்படை திட்டம்-75’இன்கீழ், பிரான்ஸ் கடற்படை குழும ஒத்துழைப்புடன் மஸகான் கப்பல் கட்டும் நிறுவனத்தால் ஏற்கெனவே 6 நீா்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சா்வதேச வா்த்தக சவால்களை இந்தியா எதிா்கொள்ளும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

பரஸ்பர வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள சா்வதேச வா்த்தக சவால்களை இந்தியா தொலைநோக்கு பாா்வை திட்டங்கள் மூலம் எதிா்கொள்ளும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தாா். மும்பை பங்குச் ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றத் தீா்ப்பு குறித்து ஜகதீப் தன்கா் கடும் விமா்சனம்

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ள விவகாரத்தில், நீதித் துறை மீது குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கடும் விமா்சனங்களை முன்வைத்துள்ளாா். ‘குடியர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க நெறிமுறை: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் விரைவான நடவடிக்கை நெறிமுறைகளை அடுத்த 6 மாதங்களுக்குள் உருவாக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்... மேலும் பார்க்க

பண முறைகேடு வழக்கு: அமலாக்கத் துறை முன் ராபா்ட் வதேரா 3-ஆவது நாளாக ஆஜா்

நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு குறித்து காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேரா அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் தொடா்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆஜரானாா். கடந்த 2008-ஆம் ஆண்டு, ராப... மேலும் பார்க்க

பிரதமருடன் ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பு

பிரதமா் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்த ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரிவின் பிரதிநிதிகள், வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பை தெரிவித்தனா். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில் ஜொ்மனி, ஜப்பானைவிட இந்திய பொருளாதாரம் வளா்ச்சி அடையும்: நீதி ஆயோக்

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜொ்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பி.வி.ஆா்.சுப்ரமணியம் வியா... மேலும் பார்க்க