செய்திகள் :

ரூ.7 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் தம்பதி சரண்!

post image

சத்தீஸ்கரின் கபிர்தம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சல் தம்பதி சரணடைந்துள்ளனர்.

மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தோர் உள்ளடக்கிய மாவோயிஸ்ட் படையில் இயங்கி வந்த ரமேஷ் (எ) அடம் குட்டு (வயது 29) மற்றும் அவரது மனைவியான சவிதா (எ) லச்சி ஒயாம் (21) ஆகிய இருவரும் கபிர்தாமின் கவ்ராதா பகுதியிலுள்ள காவல் துறையினரிடம் சரண்டைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமானமற்ற மாவோயிஸ்ட் கொள்கைகள் மற்றும் கடுமையான வனப்பகுதி வாழ்க்கை ஆகியவற்றின் மீது உண்டான அவநம்பிக்கையினால் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது சரணடைந்துள்ள ரமேஷ் மீது ரூ.5 லட்சம் மற்றும் மற்றும் சவிதா மீது ரூ.2 லட்சம் அளவிலான வெகுமதி அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தனர்.

கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் நக்சல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் 2019-ல் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையின்போது ரமேஷின் உடலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த 2017 முதல் மூன்று மாநிலங்களும் இணையும் காட்டுப்பகுதியில் தங்களது தளத்தை அமைக்க நக்சல்கள் முயன்று வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது சரணடைந்துள்ள நக்சல்கள் இருவருக்கும் அரசின் திட்டத்தின்படி ரூ.25,000 வழங்கப்பட்டு அவர்களது மறுவாழ்விற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:இந்திய வீரரை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவம்!

பஹல்காம் தாக்குதல்: மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவு பெற்றது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதிக்க, தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தத... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர் செல்கிறார் ராகுல்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி நாளை(ஏப்.25) ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்குச் செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: இந்து கோயில்களில் முஸ்லிம் பணிபுரியத் தடை!

உத்தரப் பிரதேசத்தில் கோயில் கட்டுமானப் பணியில் இருந்த முஸ்லிம்களை கோயில் நிர்வாகத்தினர் பணிநீக்கம் செய்தனர்.உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸில் உள்ள இந்து கோயிலின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த இரண்டு ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி!

பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு நிவாரண நிதியுதவி அறிவித்து அஸ்ஸாம் முதல்வர் உத்தரவிட்டார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான 26 பேரின் குடும்பங்களுக்கும... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: ஜி20 நாடுகளின் தூதரக அதிகாரிளுக்கு மத்திய அரசு விளக்கம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக சீனா, கனடா உள்ளிட்ட ஜி20 நாடுகளின் தூதர்களுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று விளக்கமளித்தது.ஜம்மு - காஷ்மீர் பஹல்காமில் ஏப்.22 (செவ்வாய்க்கிழமை) பயங்கரவாதிக... மேலும் பார்க்க

இந்திய வீரரை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவம்!

பாகிஸ்தானின் ஜலோக் தோனா என்ற பகுதிக்கு தவறுதலாகச் சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைப் பிடித்து வைத்துள்ளனர். கொல்கத்தாவைச் சேர்ந்தவரான இந்திய பாதுகாப்புப் படை வீரர் பி.க... மேலும் பார்க்க